மீண்டும் மீண்டும் ஓவியா வீடியோவின் பரபரப்பு..அதென்ன பதில்? காசு சம்பாதிக்கணுமா? பிரபலம் கேட்ட நறுக்
சென்னை: நடிகை ஓவியாவின் வீடியோ லீக் ஆன சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த விவகாரத்தை ஓவியா எதிர்கொண்ட விதம் பாராட்டத்தக்கது என்றும், துணிச்சல் மிகுந்தது என்றும் பலரும் பாராட்டியிருந்தனர். ஆனால், மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் ஓவியா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஓவியாவின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.. அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என்றும் சொல்லவில்லை, தான்தான் என்றும் ஓவியா சொல்லவில்லை..

வீடியோவை பார்த்து ரசிகர்களை என்ஜாய் செய்யுமாறும், அந்த வீடியோவில் இருப்பது யாருக்கும் தெரியாத மர்மமாகவே இருக்கட்டும், அடுத்த முறை பெரிய வீடியோ வெளியிடலாம் ப்ரோ என்றெல்லாம் ஓவியா தந்திருந்த பதிலடிகள் இணையவாசிகளின் கவனத்தை திசைதிருப்பியிருந்தது..
வரவேற்பு: ஒருகட்டத்துக்குமேல், தன்னை விமர்சித்த நபர்களிடமே வீடியோவின் லிங்க்கை கேட்டிருந்தது, அதற்கு மேல் சலசலப்பையும் ஏற்படுத்தியிருந்தது. ஓவியாவின் இந்த பதிலடிகளை இணையவாசிகள் பெரும்பாலானோர் வரவேற்றும் கொண்டாடினார்கள்..
அதேபோல, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு சேனலுக்கு தந்த பேட்டியில், "சில வருடங்களுக்கு முன்பு, 3 எழுத்து நடிகை, ஸ்டார் ஓட்டலில் குளிப்பதை யாரோ வீடியோ எடுத்து இணையத்தில் போட்டுட்டாங்க.. உடனே அந்த நடிகை, "அது நான் இல்லை" என்று அந்த நடிகை பதறிப்போய் மறுத்தார்.. ஆனாலும், குளிக்கிற வீடியோவில் இருப்பது நடிகைதான் என்பது அனைவருக்குமே தெரிந்துவிட்டது.
கண்ணதாசன்: ஆனால், ஓவியா விஷயத்தில் அப்படியில்லை.. மற்ற எத்தனையோ பேர் இப்படி தவறு செய்ததில்லையா? நாலு சுவற்றுக்குள் தவறு செய்பவர்களை என்ன செய்வது? "யாருமே இங்கே கண்ணகி இல்லை" என்று கண்ணதாசன் சொல்லியிருக்கார்.. அந்தவகையில், ஓவியாவின் துணிச்சல் பாராட்டத்தக்கது" என்றும் கூறி ஓவியாவின் துணிச்சலை பாராட்டியிருந்தார்.
இந்நிலையில், King 24X7 யூடியூப் சேனலுக்கு வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. இந்த பேட்டியில், ஓவியாவின் பதிலை கண்டித்துள்ளார்.. இதுகுறித்து அவர் சொன்னதாவது:
கண்டிக்க வேண்டும்: ஓவியாவின் பதிலை இந்த உலகம் கொண்டாடி கொண்டிருக்கிறது.. உள்ளபடி சொல்ல வேண்டுமானால், ஓவியாவை கண்டித்திருக்க வேண்டும். அதேசமயம் அந்த வீடியோவில் இருப்பது நான்தான் என்று ஓவியா சொல்லியிருந்தால் இவ்வளவு பிரச்சனை கிடையாது.. அல்லது நான்தான் என்றாவது சொல்லியிருக்க வேண்டும். ஒருவர் கேள்வி கேட்டால், நக்கலாக பதில் சொன்னால் எப்படி?
போலீசுக்கு சென்று புகார் தந்திருப்பதை வைத்து, வீடியோவில் இருப்பது ஓவியாதான் என்பது அனைவருக்கும் தெரியவருகிறது. "என் முன்னாள் நண்பர், தாரிக் என்பவர் என் அனுமதியில்லாமல், இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்" என்று ஓவியா புகாரில் கூறியதாக தெரிகிறது.
விளம்பரம் நோக்கம்: ஆனால் நான் என்ன கேட்கிறேன், இதை வீடியோவாக எடுக்க வேண்டிய நோக்கம் என்ன? வியாபாரம் செய்வதற்கா? விளம்பரம் நோக்கத்திற்காக எடுக்கப்பட்டதா? என்று தெரியவில்லை.. ஓவியா தந்த புகாரின்பேரில் போலீஸ் விசாரித்து கொண்டிருக்கிறது.... அதற்காக ஓவியா சொன்ன பதிலை, இந்த உலகம் கொண்டாட வேண்டிய அவசியமில்லை.. கடுமையாக கண்டிக்க வேண்டும்.
ஓவியா வீடியோ போலியானது கிடையாது.. சுசி லீக்ஸ் வீடியோவும் அப்படித்தான்.. கோட் படத்தில், விஜயகாந்த்தை திரையில் காட்டுவதற்கும், சிறுவயது விஜய்யை காட்டுவதற்கும் பலகோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, அவ்வளவு செலவு செய்தா, நித்தியானந்தா வீடியோ, சுச்சி லீக்ஸ் போன்றவை எடுக்குறாங்க? கிடையாது..
காவல்துறை: அனைத்து வீடியோக்களுமே யதார்த்தமாகவே எடுக்கப்பட்ட வீடியோக்கள்தான்.. அவையெல்லாம். காவல்துறைதான் ஆராய்ந்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மற்றபடி ஓவியா வீடியோக்கள் உண்மைதான் என்று தெரிவித்துள்ளார் வலைப்பேச்சு அந்தணன்.












Click it and Unblock the Notifications