Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணீர் விட்டு அழுது வீடியோ வெளியிட்ட நடிகை ரச்சிதா.. நயன்தாரா மோட்டிவேஷன்.. இதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் விட்டு அழுதபடி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே ரச்சிதாவிற்கும் அவருடைய கணவருக்கும் இருக்கும் பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிருந்த நிலையில் தற்போது இந்த வீடியோ குறித்து அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

Actress Rachitha posted a tearful video on her Instagram page

இந்த நிலையில் எதற்காக இப்படி ஒரு வீடியோ என்பது குறித்து ரச்சிதா அதில் விளக்கமும் கொடுத்து சிலருக்கு அட்வைஸ்சும் கொடுத்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கன்னட நடிகை ஆன நடிகை ரச்சிதா கன்னடாவில் ஒரு சில டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நிலையில் முதல் முறையாக தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகம் ஆகி, அதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் மீனாட்சி ஆக வலம் வந்து கொண்டிருந்தார்.

Actress Rachitha posted a tearful video on her Instagram page

மீனாட்சி கேரக்டரில் ரச்சிதாவுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகவே தொடர்ச்சியாக பல சீசன்களில் ரச்சிதா கதாநாயகியாக நடித்து வந்தார். இவரோடு நடிக்கும் கதாநாயகர்கள் மட்டும்தான் மாறிக் கொண்டிருந்தார்கள். இதுவே வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத அங்கீகாரமும், வெற்றியும் தான்.

இந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியலை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர், சொல்ல மறந்த கதை போன்ற பல சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அதோடு ரச்சிதா காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் உடன் ஜீ தமிழில் நாச்சியார் புறம் என்ற சீரியலிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவையும் பெற்றிருந்தார்.

Actress Rachitha posted a tearful video on her Instagram page

அது மட்டும் அல்லாமல் ரச்சிதாவும் அவருடைய கணவர் தினேஷ் கார்த்திக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இப்போது இவர்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் சென்று சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் தெரிந்து விட்டது.

இந்த நிலையில் நடிகை ரச்சிதா நயன்தாராவின் பாடலான "இதுவும் கடந்து போகும்" என்ற பாடல் பேக்ரவுண்டில் ஓடிக்கொண்டிருக்க தன்னுடைய மன வேதனை மற்றும் வலிகளை அமைதியாக தன்னுடைய கண்களின் மூலமாக கண்ணீர் சிந்தி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ பார்த்த பல ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கூறி வருகிறார்கள்.

Actress Rachitha posted a tearful video on her Instagram page

அந்த வீடியோவிற்கு ரச்சிதா, " இது வலிமையான அனைத்து ஆன்மாவிற்காக.... கடந்த வருடங்களை நீங்கள் எப்படி கையாண்டீர்கள் என்று பெருமைப்படுங்கள். இந்த மௌனப் போர்கள் உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டிய தருணத்தில், உங்கள் கண்ணீரை துடைத்துக்கொண்டு உங்கள் முதுகில் உங்களை தட்டிக் கொள்ளுங்கள். பாடலின் ஆழமாக போகிறேன். கண்களை நிறைக்கும் அந்த மந்திர வார்த்தைகள்.." என தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+