Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Don't touch.. திருப்பதியில் ரசிகையின் செயலால் கடுப்பான ராதிகா.. அடுத்த நயன்தாரா இவங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளித்திரை சின்னத்திரை என கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ராதிகா சரத்குமார் திருப்பதியில் ரசிகை ஒருவரிடம் நடந்து கொண்ட செயல் இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கோயிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்ற நடிகை ராதிகா சரத்குமாரை ரசிகை ஒருவர் ஓடி வந்து அவர் தோள் மேல் கை போட்டு போட்டோ எடுக்க முயற்சி செய்திருக்கிறார்.

திடீரென்று வந்து தன்னிடம் அனுமதி வாங்காமல் வீடியோ எடுப்பதை பார்த்து கடுப்பான ராதிகா அந்த ரசிகையை பார்த்து முறைத்திருக்கிறார். அப்போது அங்கே சில கூச்சல் குழப்பங்கள் நடைபெற்றிருக்கிறது.

Actress Radhika is criticized for the way she behaved with a fan who took her photo in Tirupathi

80ஸ் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் கதாநாயகியாக பலருக்கும் பரிட்சயமான நடிகை ராதிகா அறிமுகமானது கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான். இருந்தாலும் இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்து பக்கத்து வீட்டுப் பெண் போன்று பரீட்சையம் ஆகிவிட்டார்.

வெள்ளித்திரையில் சில கதாநாயகிகளுக்கு வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரையை நோக்கி படையெடுப்பது போல ராதிகாவும் சின்ன திரையில் அடி எடுத்து வைத்து அங்கேயும் தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை அமைத்து கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி சீரியல் இவருக்கு பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பிரபலத்தை கொடுத்து விட்டது.

சித்தி சீரியல் முதல் சீசன் அமோகமாக வரவேற்பு கொடுத்ததன் காரணமாகவே இவர் சித்தி 2 எடுத்து அதிலும் பாதி நாள் வரைக்கும் நடித்துக் கொண்டிருந்தவருக்கு அரசியல் சினிமா என அடுத்தடுத்து பிசியாக இருந்ததால் சின்னத்திரையை விட்டு விலகி வெள்ளி திரையிலும், அரசியலிலும் முழு நேரமாக கவனத்தை செலுத்த தொடங்கி விட்டார்.

அதுபோல நடிகை ராதிகாவின் சொந்த வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் இருந்து வந்தது. ஆரம்பத்தில் நடிகர் விஜயகாந்தை காதலித்து வந்ததாகவும் பிறகு திருமணம் வரை சென்று சில காரணங்களால் அது நின்று போய்விட்டது என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நடிகர் சரத்குமாரை காதலித்து இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார்.

தொடர்ந்து திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ராதிகா இப்போது வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் சீரியலிலும் கவனத்தை செலுத்தி வருகிறார். விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் மீண்டும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தான் இன்று நடிகை ராதிகா கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்ற நிலையில் அங்கே அவரைப் பார்த்த அவருடைய தீவிரமான ரசிகை ஒருவர் ஓடி வந்து அவரிடம் அனுமதி கேட்காமல் அவர் தோள்மேல் கை போட்டு போட்டோ எடுக்க முயற்சித்து இருக்கிறார். உடனே இவர் திரும்பி பார்த்து முறைத்ததும் அருகில் இருந்த பவுசர்கள் தொடாதீர்கள் தொடாதீர்கள் என்று சத்தம் போட்டு இருக்கிறார்கள்.

தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் இதற்கு நெட்டிசன்கள் ஆமா இவங்க பெரிய நயன்தாரா பாரு.. அந்த அம்மா ஓடிவந்து அப்படி போட்டோ எடுக்க முயற்சி செய்யுது. இவங்களும் ஓவரா பில்டப் பண்றாங்க என்று விமர்சித்து வருகிறார்கள். ஆனாலும் சில ரசிகர்கள் யாராக இருந்தாலும் அவரிடம் அனுமதி வாங்கிவிட்டு தானே போட்டோ எடுக்க வேண்டும் இப்படி அத்துமீறுவதும் தவறுதான் என்றும் கூறி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+