முதலிரவில் நானே கஷ்டப்பட்டேன்.. இந்த ஒரு தப்பை மட்டும் பண்ணாதீங்க.. ஆண்களுக்கு ரேஷ்மா கோரிக்கை
சென்னை: தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. பிக் பாஸ் தமிழ் சீசன் 3 மூலம் பரவலாக அறியப்பட்ட இவர், தற்போது தாம்பத்திய உறவு மற்றும் பாலியல் ஆரோக்கியம் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். மேலும் மார்டன் ஆடைகளில் அவ்வப்போது தோன்றி இளசுகளின் ஹார்ட்பீட்டை அதிகரிக்கவும் வைக்கிறார்.
ரேஷ்மா பசுபுலேட்டி (Reshma Pasupuleti) தற்போது மிர்ச்சி பிளஸ் ஆப் மற்றும் கானா இணையதளத்தில் ஒளிபரப்பாகும் "அந்தரங்கம் அன்லிமிடெட்" என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில், தாம்பத்திய உறவின் முக்கிய அம்சங்கள் குறித்து அவர் விரிவாக பேசியுள்ளார். குறிப்பாக, முன் விளையாட்டு (ஃபோர்ப்ளே) மற்றும் பொறுமையின் அவசியத்தை அவர் அழுத்தமாக கூறியுள்ளார்.

சமீபத்திய காணொளி ஒன்றில் பேசிய ரேஷ்மா, தாம்பத்திய உறவில் பெண்களுக்கு ஆண்களின் பொறுமை மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டார். "எடுத்தவுடன் காஞ்ச மாடு கம்பங்காட்டில், புகுந்தது போல நடந்துகொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது," என்று அவர் வெளிப்படையாக கூறினார்.
முக்கியமான விஷயம்
முன் விளையாட்டின் முக்கியத்துவத்தை விளக்கிய ரேஷ்மா, ஒரு பெண் உடல் மற்றும் மனரீதியாக உறவுக்கு தயாராவதற்கு அது அவசியம் என்றார். "பெண்ணிடமிருந்து சமிக்ஞை வரும் வரை முன் விளையாட்டை தொடர வேண்டும்; அதற்கு பிறகே அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்," என்று அவர் அறிவுறுத்தினார். மெதுவாகவும், பொறுமையாகவும் செயல்படுவது உறவில் அதிக திருப்தியை தரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முதலிரவில் கஷ்டம்
தனது சொந்த அனுபவத்தையும் ரேஷ்மா பகிர்ந்து கொண்டார். தனது முதல் திருமணத்தில் பொறுமையின்மை காரணமாக சில சவால்களை சந்தித்ததாகவும், முதலிரவில் தான் ரொம்ப கஷ்டப்பட்டதாகவும் அவர் வெளிப்படையாக கூறினார். அந்த அனுபவத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, மற்றவர்களுக்கு வழிகாட்டும் விதமாக இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.
காமசூத்ரா
"அந்தரங்கம் அன்லிமிடெட்" நிகழ்ச்சியில், முதல் முறை உறவு, முத்தத்தின் முக்கியத்துவம், காமசூத்ரா, மாதவிடாய் நிறுத்தம், ஆண்களின் நெருக்கமான சுகாதாரம் போன்ற பல்வேறு தலைப்புகளையும் ரேஷ்மா விவாதித்துள்ளார். இளைஞர்கள் தவறான தகவல்களை பெறுவதை தவிர்க்கவும், சரியான வழிகாட்டுதலை வழங்குவதுமே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
ரேஷ்மா பசுபுலேட்டி
ரேஷ்மா பசுபுலேட்டி இந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசி வருகிறார். தமிழ் சமூகத்தில் பாலியல் ஆரோக்கியம் குறித்த ஓபனான உரையாடல் தேவைப்படுவதால் இந்த முன்முயற்சிக்கு அவர் ஆதரவு கரம் நீட்டியதாக கூறப்படுகிறது. புரிதல் மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்கும் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications