கணவர் இறப்பிற்குப் பிறகு நடிகை “ஸ்ருதி” வெளியிட்ட உருக்கமான பதிவு..இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் மூலமாக ராகினி கேரக்டரில் அறிமுகமான நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் திடீரென்று உயிரிழந்து இருக்கிறார்.
நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் 30 வயதாக இருக்கும்போது மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.
நடிகை ஸ்ருதிக்கும் அவருடைய கணவர் அரவிந்த் சேகருக்கும் கடந்த வருடம் தான் திருமணம் முடிந்தது. இந்த நிலையில் தன்னுடைய கணவர் இறப்பிற்கு பிறகு முதல் முறையாக ஸ்ருதி உருக்கமான பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

பொதுவாக யாருக்கு எப்போது வாழ்க்கை முடிகிறது என்று தெரியாத சூழ்நிலைகள்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்னதான் பணமும் புகழும் இருந்தாலும் மரணம் எல்லோருக்கும் பொதுவானது. அது எப்போது எப்படி வரும் என்று தெரியாவிட்டாலும் அந்த மரணத்தால் நெருங்கியவர்களின் பிரிவை ஏற்றுக்கொள்ளாமல் அவரை நேசித்தவர்களும் பலர் தினமும் மனதளவில் மரணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்த வகையில் சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா கணவர் அரவிந்த் சேகர் 30 வயதில் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். அவர் உடற்பயிற்சி நிலையத்தை நடத்தி வந்தார். 2022 ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவிற்கும் அரவிந்திற்கும் கடந்த வருடம் தான் திருமணம் முடிந்தது.
நடிகை ஸ்ருதி, நாதஸ்வரம், பாரதி கண்ணம்மா, வாணி ராணி, கல்யாண பரிசு, பொம்மு குட்டி அம்மாவுக்கு போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி தன்னுடைய கணவரோடு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருவார்.
இந்த நிலையில் ஸ்ருதியின் கணவர் திடீரென்று இறந்து போன பிறகு பிறகு முதல்முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில்," பிரிந்தது உடல் மட்டும் தான். ஆனால் உங்கள் ஆன்மாவும் மனமும் என்னை சூழ்ந்து இப்போதும் என்றென்றும் பாதுகாக்கிறது. நீங்கள் நிம்மதியாக இருங்கள் அன்பே, உங்கள் மீதான எனது அன்பு இப்போதும் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.
நாங்கள் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நிறைய நினைவுகளை வைத்திருந்தோம். அதை நான் வாழ்நாள் முழுவதும் மதிக்கிறேன். அதுபோல உன்னை மிஸ் பண்ணுகிறேன். மேலும் உன்னை நேசிக்கிறேன் அரவிந்த். என் அருகில் நீ இருப்பதை என்னால் உணர முடிகிறது" என்று கூறி இருக்கிறார். அத்தோடு தன்னுடைய கணவரோடு மகிழ்ச்சியாக எடுத்த புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார்.
இந்த பதிவுக்கு அதிகமான ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் தொடர்ச்சியாக தங்களுடைய ஆறுதல்களையும், வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சீரியல் நடிகை ரஷ்மிதா, "அன்பே நாங்கள் அனைவரும் உங்களுக்காக இருக்கிறோம். தயவு செய்து வலுவாக இருங்கள்" என்றும் நடிகை ஹேமலதா, "ஸ்ட்ராங்காக இருங்கள் அன்பே" என்றும் நடிகை தியா மேனன், "இந்த செய்தி இதயத்தை வதைக்கிறது. உறுதியாக இருங்கள்" என்றும் இதுபோல பல நடிகர்களும் பிரபலங்களும் தொடர்ச்சியாக ஸ்ருதிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்த வகையில் நாமும் அவருடைய மனம் உறுதியாகவும், எதிர்கால வாழ்க்கைக்கு தகுந்தது மாதிரியும் பக்குவப்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளலாம்.
-
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பாரதிராஜா.. தன்னம்பிக்கை மனிதனின் எழுச்சி! லீக்கான போட்டோஸ் -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications