பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன்! நடிகை ஸ்ருஷ்டி டாங்கே பரபரப்பு புகார்
சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை நடைபெறும் நடன நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக நடிகை ஸ்ருஷ்டி (சிருஷ்டி) டாங்கே பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் என்னை பார்ப்பதற்காக காத்திருக்கும் எனது ஆதரவாளர்கள், ரசிகர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன்.

நான் அந்த ஷோவில் இருந்து விலகுகிறேன். இதை சொல்வதில் எனக்கு வருத்தமாக இருக்கிறது. இந்த முடிவு எந்த வகையிலும் பிரபுதேவாவுக்கு எதிரானது அல்ல. நான் எப்போதுமே அவருடைய ரசிகை. அதே வேளையில் அந்த நிகழ்ச்சியில் காட்டப்படும் பாரபட்சங்களை என்னால் ஏற்க முடியாது.
இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வந்த போதிலும் பாரபட்சம் காட்டுவதை நினைக்கும் போது என் மனதை உண்மையில் காயப்படுத்திவிட்டது. மேலும் உங்களுக்கான உரிமையை பெற இன்னும் போராட வேண்டிய நிலைதான் இருக்கிறது.
பொய்யான வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாத உறுதிமொழிகளும் எனக்கு அதிருப்தியை அளிக்கின்றன. இவைதான் நான் ஷோவில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
பிரபுதேவாவை கொண்டாட எனக்கு ஒரு நிகழ்ச்சியெல்லாம் தேவையில்லை. அவரை நாம் எப்போதுமே கொண்டாடுவோம். அதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. இந்த நிகழ்ச்சியானது எனக்கு காலாகாலத்திற்கும் நினைத்து மகிழும் வகையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக அதிருப்தியில் முடிகிறது.

இந்த பதிவின் மூலம் நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்பதை கூறிக் கொள்வதற்காக என சொல்லலாம்.
அடுத்த முறை சிறந்த ஒரு நிகழ்ச்சியில், எனக்குரிய மரியாதை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த நிகழ்ச்சியை எடுத்து நடத்தும் குழு, திட்டமிடலில் அதிக கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். இதில் கலந்து கொள்ளும் கலைஞர்களுக்கு உரிய மரியாதையை கொடுத்திருக்கலாம் என்பதுதான் எனக்கு ஒரே விருப்பமாகும். இந்த நிகழ்ச்சியில் இதுவரை நான் கலந்து கொண்டதில் நிறைய கற்றுக் கொண்டேன். இவ்வாறு ஸ்ருஷ்டி டாங்கே தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவா, நடன இயக்குநர் மட்டுமில்லை, திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளரும் கூட. அவர் கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் இருந்து வருகிறார்.
பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி நாளை மாலை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. நடிகரும் இயக்குநருமான ஹரிகுமார் இந்த ஷோவை இயக்குகிறார்.
ஆர்ட் டைரக்டர் கிரண் நிறைய செட்டுகளை அமைத்துள்ளார். இந்த நிகழ்வுக்கான டிக்கெட் விற்பனை கடந்த மாதம் கோலாகலமாக நடந்தது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications