நடிகர் சங்கம் உதவல.. கணவரை விபத்து ஏற்படுத்திய நபர்கள்.. கண்ணீரோடு நடிகை வினோதினி
சென்னை: வண்ண வண்ண பூக்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை வினோதினி தன்னுடைய கணவருக்கு ஏற்பட்ட விபத்து குறித்து கண்ணீரோடு பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
முகம் தெரியாத இரண்டு நபர்கள் தன்னுடைய கணவர் மீது பைக்கில் மோதி விட்டு சென்று விட்டதால் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து வினோதினி பேசியிருக்கிறார்.

அதோடு தான் நடிகர் சங்க உறுப்பினராக இருக்கும் நிலையிலும் தனக்கு நடிகர் சங்கத்திலிருந்து எந்த உதவியும் செய்யவில்லை. தன்னுடைய கணவருக்கு விபத்து ஏற்படுத்தியவர்களை கண்டுபிடிப்பதற்காக யாருமே உதவி செய்யவில்லை என்று வினோதினி குற்றம் சாட்டியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை தான் வினோதினி. இவர் மணல் கயிறு என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி அதற்குப் பிறகு நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்த வண்ண வண்ண பூக்கள் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருந்தார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த வினோதினி இப்போது சீரியல் களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சியான சம்பவங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் தன்னுடைய கணவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது அப்போது ரோட்டில் என்னுடைய கணவர் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கும்போது 20 வயது மதிப்புள்ள இரண்டு நபர்கள் பைக்கில் வந்து என் கணவர் மீது மோதி விட்டனர்.
ரோட்டோரமாக நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோதி விட்டு அவர்கள் போய்விட்டார்கள். எங்களுக்கு வேறு எந்த தகவலும் தெரியாது. விபத்தை ஏற்படுத்தியவர்கள் அடுத்த நாள் கோர்ட்டில் பத்தாயிரம் ரூபாயை அபராதமாக செலுத்தி விட்டு போய் விட்டார்கள். ஆனால் நாங்கள் அந்த ஆக்சிடென்ட்க்கு பிறகு பட்ட வேதனை சொல்ல முடியாதது.
என்னுடைய குடும்பத்தில் இருந்தும் சரி என்னுடைய கணவர் குடும்பத்திலிருந்து சரி எங்களுக்கு யாருமே உதவி செய்யல. ஏதாவது வேண்டுமா என்று மட்டும் போனில் கேட்டார்களே தவிர எதுவும் செய்யவில்லை. என்னுடைய கணவர் அந்த விபத்தில் இருந்து மீண்டு வருவதற்கு ரொம்பவே கஷ்டப் பட்டார். ஒரு வருடங்களுக்கு என்னால் அந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க முடியவில்லை.
நான் வேலையும் பார்க்க வேண்டும், குழந்தைகளை பார்க்க வேண்டும், என்னுடைய கணவரையும் பார்க்க வேண்டும், குடும்ப செலவுகளையும் பார்க்க வேண்டும். எல்லா பொறுப்புகளும் என்னுடைய தலையிலேயே விழுந்தது. ஆனாலும் நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த போதும் ஒரு சிலர் மட்டும்தான் வந்து பார்த்தார்கள்.
ரச்சிதா தினேஷை பிரிவதற்கு முக்கிய காரணமே இதுதானா? அந்த சீரியலால் வந்த வினையா? இத்தனை நடந்திருக்கா?
ஒருவேளை அனைவரும் சேர்ந்து வந்திருந்தால் விபத்து ஏற்படுத்தியவர்கள் யார் என்று கண்டுபிடித்து இருக்கலாம். ஆனால் அப்படி எதுவுமே செய்யவில்லை. அதுபோல அந்த நேரத்தில் எப்படியாவது என் கணவரை காப்பாற்றி என் குழந்தைகளை நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் எனக்கு இருந்தது என்று கண்ணீரோடு அந்த பேட்டியில் வினோதினி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications