நல்லா பார்த்துக்கோங்க.. என் மனசில் ஒண்ணுமில்லை... "ஓப்பனாக" சொன்ன யாஷிகா!
சென்னை: உள்ளிருக்கும் மனசை இந்த மாதிரி திறந்து காட்டினா பார்க்கிறவர்களின் நிலைமை என்ன ஆகும் என கொஞ்சம் கூட யோசிக்காமல் செக்க சிவந்த அழகை தூக்கி நிறுத்தும் திமிரை வெளிப்படையாக காட்டியிருக்கிறார் யாஷிகா.
உலகத்திற்கே ஊரடங்கு போட்டாலும் எனக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது என வீட்டுக்குள்ளேயே போட்டோ ஷூட் நடத்தி பார்ப்பவர்களை பரவசப்படுத்துகிறார் யாஷிகா.
யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தற்போது இன்ஸ்டாகிராம் ,டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.

முரட்டுக் குத்து
இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பல வருடம் ஆகிவிட்டாலும் இன்னமும் அந்த படத்தின் கதையில் இருந்து இவர் மீளவில்லை போல. அதனால்தான் திடீர் திடீரென அதே கெட்டப்பில் வந்து இறங்கி விடுகிறார் .புது பட சூட்டிங் எதுவும் கைவசம் இல்லாவிட்டாலும் எனக்கு போட்டோ சூட் இருக்கிறது என பிசியாக கலக்கிக் கொண்டிருக்கும் இவர்

செம எனர்ஜி
தற்போது இளைஞர்களுக்கு எனர்ஜி ஊட்டி சூடு ஏற்றியிருக்கிறார். சினிமா நடிகைகள் பலர் சாப்பாடு இல்லாமல் கூட இருந்து விடுவார்கள் ஆனால் மேக்கப்பும் கேமராவும் இல்லாமல் இருந்து விடமாட்டார்கள் அதுபோலத்தான் யாஷிகா ஆனந்த் இருந்துவருகிறார் .ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு இருந்தாலும் என்னால் மேக்கப் போடாமலும் போட்டோஸ் எடுக்காமலும் இருக்க முடியாது என தற்போது வீட்டில் இருக்கும் பழைய துணிகளை அங்கேயும் இங்கேயும் கிழித்து போட்டுக்கொண்டு புது ஃபேஷனாக மாறிவிட்டார்.

சும்மா இருப்பார்களா ரசிகர்கள்
இவருடைய புது அவதாரத்தை பார்த்து பலர் பயந்து விட்டாலும் சிலர் கிளாமர் உச்சக்கட்டம் இது தானா இல்ல இன்னும் எதிர்பார்க்கலாமா என ஏங்கி போய் கேட்டு வருகின்றனர். சும்மாவே இவர் போஸ்ட் போட்டால் கலாய்க்கும் நெட்டிசன்கள் அங்கேயும் இங்கேயும் கிழிஞ்சிருக்கும் ஜீன்ஸ் உடையில் எடுத்திருக்கும் போட்டோவை பார்த்ததும் சும்மா இருப்பார்களா.

நக்கல்
இந்த நேரத்தில் மக்கள் கஷ்டப் படுகிறார்கள் என்றால் யாஷிகா ரொம்பவே கஷ்டப்படுகிறார் போல அதனால்தான் இப்படி உடுக்க கூட துணி இல்லாமல் கிழிந்த துணியை போட்டுக் கொண்டிருக்கிறார் என நக்கலாக கலாய்த்து வருகின்றனர் .ஆனாலும் சிலர் பரவாயில்லை இந்த மாதிரி அடிக்கடி போஸ் கொடுத்து எனர்ஜி கூட்டி வந்தா தான் எங்களுக்கும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருக்கிறது.

புத்துணர்ச்சி
நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் என்னடா வாழ்க்கை என சலித்துக் கொண்டு இருக்கும்போது இந்த மாதிரி போஸ்ட் பார்த்தால் கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆக தான் செய்கிறது எனவும் சிலர் கமெண்ட் போட்டு இருக்கின்றனர். இவருக்கு சினிமா வாய்ப்புகளை தாண்டியும் பிக்பாஸ் நிகழ்ச்சி நல்ல ஒரு பிளாட்பாரம் கொடுத்தது .அதனால்தான் இவர் தமிழ் ரசிகர்களிடமும் பாப்புலராக ஆரம்பித்தார் .

ரிலாக்ஸ் ஆகுதே
அதற்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் கெஸ்ட் ரோலில் வந்திரந்தாலும் அதற்கு பிறகும் பல சீரியல்களில் கெஸ்ட் ரோலில் வந்து கலக்கியிருக்கிறார். சீரியல்களிலும் நான் கவர்ச்சி பழமாகத்தான் கலக்குவேன் என அடம் பிடித்துக் கொண்டு சீரியல் ரசிகர்களையும் கதிகலங்க வைத்து விட்டார் .தற்போது போட்டோஷூட் மட்டுமே கதி என இருக்கும் இவர் விதவிதமாக போட்டோக்களை எடுத்து குவித்து வருகிறார்












Click it and Unblock the Notifications