அண்ணி சோபியாவோடு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடந்த மனஸ்தாபம்? இணையத்தை ஈர்த்த மணிகண்டனின் 2வது மணம், குழந்தை
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன், இரண்டாவது திருமணம் செய்து, குழந்தை பிறந்து இருப்பதை போட்டோவுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.. இதையடுத்து, மணிகண்டனின் முன்னாள் மனைவி சோஃபியாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிலடி தந்திருந்தார். இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.. அதில், ஐஸ்வர்யா ராஜேஷூக்கும், சோபியாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் மணிகண்டன், அட்டகத்தி படத்தில் நடித்த சோஃபியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. பிறகு மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இதுகுறித்து, மணிகண்டன் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார்.. எனவே இது வெறும் வதந்தி என்றே கருதப்பட்டது.

இரண்டாவது மனைவி
ஆனால் தற்போது, தன்னுடைய இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறந்ததை அறிவித்துள்ளது பலருக்கும் வியப்பை தந்திருந்தது.. இதேநேரத்தில் முன்னாள் மனைவி சோஃபியாவும் தன்னுடைய இன்ஸ்டாவில், "இனி வாழ்க்கை அழகான பாதையை நோக்கி போகும், அழகான அத்தியாயத்திற்காக நான் தயாராக இருக்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், King voice என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "நடிகை ஐஸ்வர்யாவின் தம்பியின் பெயர் மணிகண்டன் ராஜேஷ்.. தன்னுடைய 2 வது மனைவியுடனும், குழந்தையுடனும் போட்டோ எடுத்து, இணையத்தில் வெளியிட்டிருந்தார்.. இது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது..
முதல் மனைவி பதிவு
எப்போது மணிகண்டன் 2வது திருமணம் செய்தார் என்பது யாருக்குமே தெரியாத நிலையில், இப்போது குழந்தையும் பிறந்துள்ளது.. அதேசமயம், முதல் மனைவி வெளியிட்டிருந்த பதிவும் இணையத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.. சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்து, பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தாத நடிகர் மணிகண்டன்..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மணிகண்டன் போட்டியாளராக பங்கேற்றபோதுதான், அவருக்கு புகழ் அதிகரித்தது.. ஆனாலும், புதிய படம் எதிலுமே அவர் ஒப்பந்தம் ஆகவில்லை. சமீபத்தில் மணிகண்டன், ஒரு டான்ஸ் கிளப்பை ஆரம்பித்துள்ளார்.. இந்த டான்ஸ் கிளப்பை, நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைத்திருந்தார். சினிமா பிரபலங்கள் பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்..
மணிகண்டன் முதலில் நடிகை சோபியாவை காதலித்து திருமணம் செய்தார்.. அட்டக்கத்தி படத்தில் நடித்திருந்தவர்தான் இந்த சோபியா.. பிறகு விஜய் டிவி, ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களிலும் கதாநாயகியாக சோபியா நடித்து கொண்டிருந்தார்..
சீரியலில் பிரபலம்
சன் டிவியில் ஒளிபரப்பான மருமகள் என்ற தொடரிலும் வில்லியாக நடித்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.. அப்போதுதான், சோபியாவை காதலித்து திருமணம் செய்தார்.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மணிகண்டன் கலந்துகொண்டபோது, மகனுடன் சோபியா, அந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் வந்திருந்தார்.. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை,, சோபியாவும், மணிகண்டனும் விவாகரத்து செய்து கொண்டார்கள்..
ஆனாலும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்தியை அறிவிக்கவில்லை.. அதேசமயம், சோஷியல் மீடியாவில் சோபியாவுடன் எடுத்து பதிவிட்டிருந்த போட்டோக்களை மணிகண்டன் நீக்கியிருந்தார்.. அப்போதுதான் இருவரும் பிரிந்த விஷயமே தெரியவந்தது.
2வது மனைவி யார்
இந்நிலையில்தான், 2வது மனைவிக்கு குழந்தை பிறந்ததை மணிகண்டன் தற்போது அறிவித்துள்ளார்.. எனினும் 2வது மனைவி யார் என்பது பற்றிய விவரத்தை தெரிவிக்கவில்லை..
ஐஸ்வர்யாவுக்கும், சோபியாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்காகவே தன்னுடைய அக்கா ஐஸ்வர்யாவுடன் பேசாமல் பிரிந்திருந்தார் மணிகண்டன். விவாகரத்துக்கு பிறகுதான், அக்கா , தம்பி இருவரும் இணைந்து பல விழாக்களில் பங்கேற்று வருகின்றனர்.
2வது திருமணம், குழந்தை பிறந்ததை மணிகண்டன் பதிவிட்டுள்ள இந்நிலையில், சோபியாவும் இணைய பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.. அதில், புதிய அத்தியாயம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது, நான் இன்னும் வலிமையாக இருக்கிறேன் என்று பெருமிதப்பட்டு தெரிவித்துள்ளார். ஆனால், மணிகண்டனின் 2வது திருமணத்துக்கு எந்த எதிர்ப்பையும் சோபியா தெரிவிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications