ஆலியா, சஞ்சீவ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லையாம்
சென்னை: ஆல்யா மானசா தன்னிடம் கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியைக் கூறி இருக்கிறாராம்.
இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை என்றாலும் வாழ்த்துக்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மீண்டும் சீரியலுக்கு திரும்பிய ஆலியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலின் மூலமாக காதல் தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடிதான். சீரியலின் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ஆலியா தற்போது திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் நிலையில் அவருடைய ரசிகர்களின் கேள்விக்கு அசத்தலான பதிலை கூறி அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளாராம் .

அது எப்போது இருக்கும்
சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் பிஸியாக இருக்கும் நட்சத்திர தம்பதிகளான இவர்கள் இருவரும் தங்களுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு அடிக்கடி பதில் கூறி திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து வந்த மாதிரி தான் தற்போது ஆலியா மானசாவிடம் ரசிகர்கள் பலர் தொடர்ந்து கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள். அதில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அந்த ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார். ஆலியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால் பல ரசிகர்கள் தொடர்ந்து உங்களுக்கு எப்போது டியூ டேட் என்று கேட்டு வருகிறார்களாம். அதற்கு அவர் ஏப்ரல் மாதத்தில் கடைசி வாரத்தில் அல்லது மே மாதத்தின் முதலில் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இப்போதே குழந்தைக்கு பெயரா
அடுத்தது ஒரு ரசிகர் இவரிடம் இவர் கர்ப்பமாக இருப்பதால் தொடர்ந்து ராஜா ராணி சீரியலில் நடிப்பாரா? ?அல்லது விலகி விடுவாரா என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு விலகுவதாக ஐடியா கிடையாது. ஒரே ஒரு சந்தியா தான்...அது இந்த ஆலியா மட்டும்தான் என்று கூறியிருக்கிறார். இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். தொடர்ந்து இவர்தான் என்ற சீரியலில் நடிக்க வேண்டும் என்றும் தங்களுடைய விருப்பங்களை கூறிவருகின்றனர். அடுத்ததாக ஒரு சிலர் உங்கள் இரண்டாவது பேபிக்கு நேம் என்ன வைக்கப் போறீங்க என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பெண் குழந்தை என்றால் லைலா, ஆண் குழந்தை என்றால் ஆர்ஸ் என்று கூறியிருக்கிறார்.

இது நல்ல பதில் தான்
அடுத்ததாக ஒரு ரசிகர் நீங்களும் சஞ்சீவ் இணைந்து நடிப்பீர்களா?? என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு அவர் தலையை மட்டும் ஆம் என்று சொல்கிற மாதிரி அசைத்துக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால் இவர்கள் இருவரும் சேர்ந்து விரைவில் சீரியலில் நடிக்க இருக்கிறார்களா??அல்லது ராஜா ராணி மூன்றாவது பாகத்தில் நடிப்பார்களா?? என்று ரசிகர்களின் மத்தியில் கேள்வி எழுந்திருக்கிறது. ஏதேனும் புது சீரியல்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்களா?? என்றும் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் இருவரும் ஒன்றாக நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் தங்களுடைய விருப்பங்களை கூறிவருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications