அடுத்தடுத்து தவறி போன வாய்ப்பு.. கடைசியில் நிலைமை இப்படி ஆனது..! அங்காடி தெரு நடிகரின் பரிதாப நிலை
சென்னை: அங்காடி தெரு திரைப்படத்திலபிரபலமான நடிகர் மகேஷ் தன்னுடைய தற்போதைய நிலை குறித்து வருத்தமாக பேசிய வீடியோ வெளியாகி இருக்கிறது.
பல வாய்ப்புகள் தான் தவறவிட்ட நிலையில் தற்போது தன்னுடைய நிலைமை மோசமாக இருக்கிறது என்று அதில் தெரிவித்திருக்கிறார்.
சரியாக திரைப்படங்களை தேர்ந்தெடுக்க தெரியாததால் தான் தோற்று போய் நிற்பதாகவும் கூறி இருக்கிறார்.

சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி ஒரு சிலருக்கு மட்டும் தான் முதல் அறிமுகமே சூப்பர் டூப்பராக வெற்றி அடைந்து விடும். ஆனால் அப்படி முதல் திரைப்படங்களில் வெற்றி பெற்று அதைத் தொடர்ந்து பிறகு ஜொலிக்காமல் காணாமல் போனவர்களும் உண்டு. அந்த மாதிரி தான் அங்காடி தெரு திரைப்பட நடிகர் மகேஷின் வாழ்க்கையில் நடைபெற்றிருக்கிறது.
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையன் போல அதுவும் திருநெல்வேலி சுற்று வட்டார மக்களின் எதார்த்தத்தை தன்னுடைய நடிப்பால் கண்முன்னே கொண்டு வந்து அனைவருடைய அனுதாபத்தையும் முதல் திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பெற்றுவிட்டார். இவர் நடித்திருக்கிறாரா? இல்லது வாழ்ந்து இருக்கிறாரா? என்று சொல்லும்படி முதல் திரைப்படம் இவருக்கு பெரும் அளவில் ஹிட் கொடுத்தது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் மகேஷுக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்திருந்தார். அவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் தெலுங்கு என பிசியான முன்னணி நடிகையாக மாறிவிட்டார். ஆனால் கதாநாயகன் மகேஷ் என்ன ஆனார் என்பது குறித்து யாருக்கும் தகவல் தெரியவில்லை.

இந்த நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார். அதில் தேடி வந்த பல நல்ல கதைகளை நான் மிஸ் பண்ணி விட்டேன். அதுவும் நடிகர் அதர்வா நடித்த ஈட்டி திரைப்படத்தில் நடிக்க என்னைத்தான் முதலில் கேட்டாங்க, அதுபோல சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கேரக்டரும் எனக்கு தான் வந்தது, அதுமட்டுமல்லாமல் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. அதையெல்லாம் நான் தவற விட்டு விட்டேன்.
இது போன்ற நல்ல வெற்றி பெற்ற பல திரைப்படங்களை நான் மிஸ் செய்து விட்டேன். நான் தேர்வு செய்து நடிக்க எந்த படமும் சரியாக வெற்றிப் பெறவில்லை என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். அதுபோல அங்காடித்தெரு படத்திற்கு பிறகு சினிமாவில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும் எப்படி கதைகளை எடுக்க வேண்டும் என்று எனக்கு சொல்லித் தர யாரும் இல்லை அதனாலேயே என்னுடைய கேரியர் வீணாகப் போய்விட்டது என்று அந்த வீடியோவில் பீல் பண்ணி இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications