Aranmanai Kili Serial: போறாளே.. ஜானு பொலபொலவென்று கண்ணீர் விட்டு..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கணவனுக்காக தனது உயிரை காணிக்கையாக்க, அர்ஜுனை அழ விட்டு, தானும் பொலபொலவென்று கண்ணீர் விட்டபடி சித்தர் அழைத்த கோயிலுக்கு போகிறாள் ஜானு.

உன் புருஷன் கையால உன் கழுத்தில் மாலையைப் போட்டுக்கிட்டு வான்னு சொல்லிட்டு போறார் சித்தர்.அர்ஜுன் ஜானுவை விட மாட்டேன்னு அழுது அடம் பிடிக்கிறான்.

இவளும் கணவனைப் பிரிய மனசில்லாமல் பொலபொலவென்று கண்ணீர் விட்டபடி சித்தர் அழைத்த இடத்துக்குப்போகிறாள்..

கடைசி மாலை

கடைசி மாலை

சார் என் கழுத்தில் முதல் மாலையை நீங்கதான் போட்டீங்க. இப்போ கடைசி மாலையையும் போட்டு விடுங்க சார் சந்தோஷமா போறேன்னு ஜானு சொல்ல அழுகிறான் அர்ஜுன். உன்னை விட்டுட்டு நான் எப்படி வாழ்வேன் ஜானு என்று அழ, வாழப் பழகிக்கோங்க சார்னு சொல்றா ஜானு.

புன்னகை மன்னன்

புன்னகை மன்னன்

கடைசியா உங்க முகத்தை மனசில நினைச்சுகிட்டே நான் போகணும் சார்.இப்படி அழு மூஞ்சியா உங்க முகத்தை வச்சுக்காதீங்க. சிரிச்ச முகமா என்னை பாருங்க சார்னு புன்னகை மன்னன் படத்தில் கமலிடம் ரேகா கேட்பது போல கேட்கிறாள்.

மாலையும் கழுத்துமாக

மாலையும் கழுத்துமாக

மாலையும் கழுத்துமாக கண்ணீருடன் அர்ஜுனின் கையை விட்டுவிட்டு நான் போறேன் சார்னு சொல்லிட்டு அர்ஜுன் அழ அழ போகிறாள் ஜானு. சாமி வந்துட்டேன்..என்னை காணிக்கை ஆக்குங்கன்னு ஜானு சொல்ல, சித்தர் உடுக்கை அடிக்க ஆரம்பிக்கிறார்.

உடல் நிறம்

உடல் நிறம்

ஜானு கண்களை மூடி நிற்க அப்படியே மயக்கமாகி இலைதழை படுக்கையில் விழுந்துடறா. அவள் உடல் காலில் இருந்து கழுத்து வரை நீல நிறமாக மாறுகிறது. அது சிவனின் ஆலகால விஷம் கொண்ட பாம்பு தீண்டிய விஷம் என்று சித்தர் சொல்கிறார். அர்ஜுனும் அந்த இடத்தைத் தேடி வந்துட சித்தர் போ போ என்று விரட்டுகிறார்.

இன்றைக்கும் முடிவு தெரியலை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+