பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறும் முக்கிய கதாபாத்திரம்.. ரசிகர்கள் அப்செட்!
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து முக்கிய நடிகர் ஒருவர் விலகிவிட்டார். இனி அவருக்கு பதில் யார் நடிக்க போகிறார்கள் என தெரியவில்லை.
தமிழ் தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிகளை காட்டிலும் சீரியல்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. விஜய் டிவியில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் மக்கள் அதிகம் பார்க்கும் சீரியல் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இதில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார், அவரது கணவர் கோபியாக சதீஷ் நடிக்கிறார்கள். ஒரு குடும்பத் தலைவியாக தனது அங்கீகாரத்திற்காக பாடுபடும் கேரக்டர் சுசித்ராவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகள்
கணவரிடம், மாமியாரிடம், பெண் குழந்தையிடம் அவமானம், மகனிடம் அரவணைப்பு, மாமனாரிடம் பாசம் ஆகியவற்றை பெற்று எப்படியெல்லாம் சுசித்ரா போராடுகிறார் என்பதுதான் இந்த சீரியலின் கதையாகும். கோபியாக நடிக்கு சதீஷுக்கு ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் சகவாசம் இருக்க அந்த பெண்ணிற்காக 25 ஆண்டுகள் குடும்பம் நடத்திய மனைவியை விவாகரத்து செய்ய துணிகிறார்.

பாக்கியா
எங்கே செல்கிறோம் என சொல்லாமல் பாக்கியாவை கோர்ட்டுக்கு அழைத்து செல்கிறார் கோபி. அங்கு என்ன நடக்கும் என்பது இன்றைய எபிசோடில் தெரியும். இவ்வாறு விறுவிறுப்பாக ஓடும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவர் வெளியேறி செல்கிறாராம்.

செழியன் கதாபாத்திரம்
அவர் வேறு யாரும் இல்லை. செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யன்தான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறாராம். இவர் எதற்காக சீரியலில் இருந்து விலகுகிறார் என தெரியவில்லை. ஆனால் இதுகுறித்து சேனல் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

ராதிகா கதாபாத்திரம்
ராதிகா கேரக்டரில் நந்திதா ஜெனிபர் நடித்திருந்த நிலையில் அவருக்கு பதிலாக தற்போது ரேஷ்மா நடித்து வருகிறார். இவர் கர்ப்பமாக இருந்ததால் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் ஆர்யன் விலகினால் அவருக்கு பதில் யார் நடிப்பார்கள் என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications