அமிர்தாவுக்கு கணேசனால் வரும் பிரச்சனை.. இன்னொரு பக்கத்தில் சித்தார்த்.. எழில் எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் இரண்டாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் அடுத்தடுத்து பாக்யாவிற்கு பிரச்சனை வந்து கொண்டிருக்கும் நிலையில் பாக்கியா முக்கிய முடிவு ஒன்று எடுத்து இருக்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 2nd of October episode full update

அதே நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று நடிகர் சித்தார்த் முக்கிய கேரக்டரில் அறிமுகம் ஆகி இருந்தார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் எபிசோடில் ஆரம்பத்தில் இனியா வாசலில் வைத்து நிலாவிற்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருக்கிறார். அப்போது நிலா வெளியே போக வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். ஆனால் அது எல்லாம் முடியாது இப்பவே உனக்கு சாப்பாடு ஊட்டுவதற்குள் பாடாய்படுத்திட்ட அதனால வெளியே எல்லாம் செல்ல முடியாது என்று இனியா சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் நிலா தண்ணி வேண்டும் என்று கேட்க அதற்கு, இனியா இங்கேயே இரு என்று சொல்லி தண்ணி எடுக்க வீட்டிற்குள் போகிறார்.

Baakiyalakshmi Serial 2023 2nd of October episode full update

அடுத்து தண்ணீரோடு வெளியே வந்து இனியா பார்க்கையில் அங்கு நிலா பாப்பாவை காணவில்லை. வீடு முழுக்க தேடியும் நிலாவை காணாததால் வீட்டில் இருக்கும் எல்லோரும் பதறிப் போய் தேடிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ஈஸ்வர் ( நடிகர் சித்தார்த்) என்பவர் நிலாவே நான்கு வீடு தள்ளி பார்த்ததாக சொல்லி பாக்கியா வீட்டில் வந்து ஒப்படைக்கிறார். பிறகு பாக்யாவும் அமிர்தாவும் கண்கலங்கியபடியே ஈஸ்வருக்கு நன்றி கூறி அவரை டீ குடிக்க கூப்பிடுகின்றனர்.

Baakiyalakshmi Serial 2023 2nd of October episode full update

அப்போது அவர் டீயை குடித்துக் கொண்டு குழந்தையை கவனமாக பார்த்துக்கணும் என்று தன்னுடைய அண்ணன் மகளை பற்றிய சொல்லிக் கொண்டு இருக்கும் எல்லோரும் சித்தாவை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து செழியன் வீட்டில் காபி குடித்துக்கொண்டு ஆபீசுக்கு கிளம்புகிறார். அந்த நேரத்தில் இனியா என்னை காலேஜில் டிரா பண்ணிரு என்று சொல்ல சரி என்று இருவரும் வீட்டை விட்டு கிளம்புகின்றனர்.

Baakiyalakshmi Serial 2023 2nd of October episode full update

அப்போது ஈஸ்வரி அந்த இடத்தை விட்டு கிளம்பி போக பாக்கியா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்கிறார் பிறகு நான் இனி காலேஜுக்கு போகப்போவதில்லை என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அத்தோடு இத்தனை நாட்களாக நான் குழந்தை போல நடந்து கொண்டேன். ஆனால் இனிமேல் நான் சரியாக நடப்பேன் என்று பாக்கியா பேசிக் கொண்டிருக்க அதை கேட்டு ராமமூர்த்தி அமிர்தா எல்லோரும் அதிர்ச்சி அடைந்து பாக்யாவின் முடிவை மாற்ற பேசி பார்க்கின்றனர்.

ஆனால் பாக்கியா காலேஜுக்கு போக போறது இல்லை என்று உறுதியாக சொல்கிறார். அதை தொடர்ந்து எழில் இதற்கு வேறு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஒரு ஹோட்டல் ஒன்றியிருக்கு இனியா, எழில், பாக்யா செழியன் என எல்லாரையும் கூட்டிக்கொண்டு போகிறார். அங்கு எல்லோரும் பாக்கியாவிடம் காலேஜுக்கு போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க ஆனால் அதற்கு பாக்கியா மறுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது பழனிச்சாமியும் அங்கு வந்து அவர்களோடு சாப்பிட்டபடியே பாக்கியாவை சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+