சமையல் அறையில் பங்கு போடும் ராதிகா... பாக்கியா சொன்ன பதிலை கேட்டு அதிர்ச்சியான இனியா
சென்னை: இனியா சரணை காபி ஷாப்பில் சந்திக்க போவதற்கு பாக்கியா கூடாது என்று மறுப்பு தெரிவிக்கிறார்.
ராதிகா சொன்னது போலவே நீங்களும் சொல்றீங்க என்று இனியா பதிலடி கொடுக்கிறார்.
ராதிகாவிற்கு சப்போட்டாக பாக்கியா பேசுகிறார்.
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 27ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் பாக்கியா இரவு சோகமாக உட்கார்ந்து இருக்க, அப்போது ஜெனி ரூமில் படுத்து இருந்த இனியா எழுந்து வந்து பாக்யாவின் மடியில் படுத்து நீ ரொம்ப பாவம், ரொம்ப நல்ல அம்மா என வருத்தப்படுகிறார். அதற்கு பாக்கியா அதைப் பற்றி நீ கவலைப்படாமல் நல்லா படித்து வாழ்க்கையில் நல்ல இடத்துக்கு வரணும் என கூறுகிறார்.

மறுநாள் காலையில் பாக்யா எல்லோருக்கும் காபி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போது அனைவரும் சூப்பர் என பாராட்ட அதே நேரத்தில் வீட்டிற்கு வரும் கோபி காபி வாசனை பிடித்து தனக்கும் காபி கிடைக்காதா என்று பார்க்கிறார். பிறகு இனியா டைனிங் டேபிளில் இருந்து சேட் செய்து சிரித்துக் கொண்டிருக்கிறார். அதை பார்த்த பாக்கியா பால் கொடுத்துவிட்டு ரொம்ப நேரமா யாருக்கு மெசேஜ் பண்ணிட்டு இருக்க என்று கேட்கிறார்.
அதற்கு இனியா சரண் தான் டியூஷன் வரலைன்னு கேட்கிறான். போக வேண்டாம்னு இருக்கேன் என்று சொல்ல, ஏன் போகவில்லை? போக வேண்டியது தானே என்று பாக்கியாவும் எழிலும் கேட்கின்றனர். இன்னைக்கு வரலைன்னு சொல்லிட்டு அதான் பக்கத்தில் இருக்கிற ஸ்னாக்ஸ் கடைக்கு வர சொல்றான் என சொல்ல, அங்கெல்லாம் எதுக்கு போகணும் டியூஷன் போ அங்க பேசு வேணும்னா வீட்டுக்கு கூட்டிட்டு வா அதை விட்டுட்டு வெளியே எல்லாம் போகாத என பாக்கியா சொல்கிறார்.

அதற்கு இனியா என்னம்மா ராதிகாவும் அப்படித்தான் சொன்னாங்க. நீயும் இப்படி சொல்ற என சொல்ல, அவங்க இப்படி சொல்லி இருந்தா அது சரி தான் என பாக்கியா ராதிகாவிற்கு சப்போர்ட் செய்ய, இனியா ஷாக் ஆகிறார். பிறகு பாக்யா ஆபீசுக்கு கிளம்பி கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி வேலை முடிந்ததும் நேரா வீட்டுக்கு தானே வருவ என கேட்க, இந்த வீட்டை விட்டு போக எவ்வளவோ சந்தர்ப்பம் கிடைத்தது ஆனால் அப்போதெல்லாம் போகாத நான், எதுக்கு இப்போ சந்தோஷம் தர நிறைய விஷயங்கள் இருக்கும்போது எங்கே போகப் போறேன். எங்கேயும் போகமாட்டேன் வீட்டுக்கு வந்து விடுவேன் அத்தை என்று கிளம்புகிறார்.

பிறகு கோபி ரூமில் தூங்கிக் கொண்டிருக்கும் ராதிகாவை எழுப்ப முடியாமல் காபிக்காக புலம்பிய படியே இருக்க, அப்போது 9:30 மணிக்கு ராதிகா எழுந்து குளித்து தயாராகிவிட்டு கோபியிடம் பேச அவர் காபி குடிக்கணும் போல இருக்கு நான் ஆர்டர் பண்ணவா என கேட்கிறார். அதற்கு காபி எல்லாம் ஆர்டர் பண்றீங்க நான் போய் போட்டுட்டு வரேன் என்று ராதிகா சொல்கிறார்.
வேண்டாம் இதனால் ஏதாவது பிரச்சனை வந்தர போகுது என்று பயப்பட, இந்த வீட்ல தானே இனி இருக்க போறோம்னு முடிவு பண்ணியாச்சு. இனி என்ன நடந்தாலும் சமாளிச்சு தானே ஆகணும் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
திவாகருக்குள் தான் ஜாதி வெறி இருக்கு.. குக் வித் கோமாளியில் நடந்தது இதுதான்! கானா வினோத் ஆதங்கம் -
“குக் வித் கோமாளி” போட்டியாளர் மனைவியிடம் திவாகர் ஆபாசமாக அப்படி பேசினாரு! அதனால் தான் பிரச்சனை! மாகாபா விளக்கம் -
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications