ராதிகாவை அவமானப்படுத்திய பாக்யா.. நடுரோட்டில் கோபிக்கு ஷாக் கொடுத்த எழில்.. பரபரப்பான தருணம்
சென்னை: பாக்கியாவிடம் கோபி பேசியது உங்களுக்கு அவமானம் இல்லையா என்று ராதிகா கேள்வி கேட்கிறார்.
ராதிகாவின் கேள்விக்கு பாக்கியா பதிலடி கொடுத்து அவமானப் படுத்துகிறார்.
ரோட்டில் வாக்கிங் செல்லும் போது கோபியை எழில் திட்டுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 15ஆம் தேதி எபிசோட்டின் ஆரம்பத்தில் கிச்சனுக்கு வந்த ராதிகா அங்கே சமையல் செய்து கொண்டிருக்கும் பாக்யாவிடம் நேற்று இப்படி எல்லாம் நடக்கும் என்று நீங்க எதிர்பார்க்கல இல்ல தானே? நேத்து நிறைய நடந்துச்சு, நீங்க எதை பத்தி கேக்குறீங்க, என பாக்கியா கேட்க, கோபி உங்களை பற்றி இன்னைக்கு கோபி பேசியிருக்கிறார். இன்னும் போகப்போக பாருங்க வீட்ல இருக்குற எல்லாரும் பேசுவார்கள் என்று சொல்ல எழில் கோபப்படுகிறார்.
அதற்கு இரு எழில் நான் பதில் சொல்கிறேன் என பாக்கியா தொடங்குகிறார். எனக்கும் அவருக்கும் விவாகரத்து ஆகிடுச்சு. விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போடும்போது அவரை அவருடைய மனசுல இருந்து என் வாழ்க்கையில் இருந்து மொத்தமா தூக்கி போட்டுட்டேன். அவர் பேசுவதை நினைத்து வருத்தப்பட மாட்டேன்.
ஆனா அவர் எதுக்கு இன்னும் என்னை மனசுல வச்சு நினைச்சுகிட்டு இருக்காரு. அது உங்களுக்கு கஷ்டமா தெரியலையே, இது உங்களுடைய வாழ்க்கை கொஞ்சம் யோசித்துப் பாருங்க என்று பாக்யா சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார். அடுத்ததாக கோபி வாக்கிங் செல்ல எழில் வாக்கிங் செல்லும் வழியில் இருவரும் ஒரு இடத்தில் சந்திக்கின்றனர்.

அப்போது கோபி எழிலிடம் உங்க அம்மா எதுக்கு அவன் வீட்டுக்கு போகணும், எதுக்கு சிரிச்சு சிரிச்சு பேசணும். இதெல்லாம் தப்பா தெரியலையா? என கேட்க அவங்க என்னமோ பண்ணிட்டு போறாங்க. உங்களுக்கு என்ன அதை பத்தி நீங்க எதுக்கு கவலைப்படுறீங்க. நீங்க எதுக்கு கேக்குறீங்க என கேட்க நான் கேட்காமல் வேறு யாருக்கு அப்பா என்று கோபி பதில் சொல்கிறார்.
செழியன் உங்களை அடிக்க வந்தான். நானா இருந்தா அடிச்சிருப்பேன் என்று பதில் சும்மா தேவையில்லாமல் என்கிட்ட வந்து ஏதாவது பேசிட்டு இருக்காதீங்க. நான் இதே மாதிரி பேசிக்கிட்டு இருக்க மாட்டேன். என்று கோபத்தோடு திட்டி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
ஜெனி ரூமில் இருக்க செழியன் அவரிடம் வந்து பேசிக் கொண்டிருக்க அப்போது அடிக்கடி போன் வந்து கொண்டே இருக்க, செழியன் கிளைன்ட் விடாமல் போன் செய்ய கடுப்பாகி ஒரு கட்டத்தில் போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார். பிறகு ஜெனிக்காக ஜூஸ் எடுக்க கீழே வருகிறார். அப்போது கோபி ராதிகா செய்து கொடுத்த ஸ்வீட்டை சாப்பிட்டுக்கொண்டு பேசிக்கொண்டு இருக்க ராதிகாவிற்கு ஊட்டி விட்டதை பார்த்து சேலையை கடுப்பாகி வெளியே செல்கிறார்.
செழியன் பார்த்துவிட்டதை பார்த்த கோபி எழுந்து ரூம்பிற்கு செல்ல பிறகு இருவரும் நேருக்கு நேராக பார்த்த முறைத்துக் கொள்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications