Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈஸ்வரி சொன்ன பொய்யை நம்பும் கோபி..கண்கலங்கும் ராதிகா.. பாக்கியா செய்த செயல்..திடீர் திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெனியை கீழே தள்ளிவிட்டது ராதிகா தான் என்று ஈஸ்வரி சொன்னதை கோபி நம்பி ராதிகாவை திட்டுகிறார்.

யார் என்ன சொன்னாலும் நம்பிடுவீங்களா? என் மேல நம்பிக்கை இல்லையா என ராதிகா கண்கலங்கி அழுகிறார்.

ராதிகாவை புரிந்து கொண்ட பாக்யா ராதிகாவுக்கு சமாதானம் கூறுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 May 8th promo and Episode Highlights

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 8ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ராதிகா ஜெனி குறித்து நலம் விசாரிக்க, ஈஸ்வரி அப்போ அவர் கீழ விழும்போது நீ மட்டும் தான் இருந்தியா? அப்படின்னா நீ தான் அவளை தள்ளி விட்டாயா? என்று கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதற்கு ராதிகா இப்படியெல்லாம் பேசாதீங்க மனசு கஷ்டமா இருக்கு, என்ன பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது என்று கண்கலங்கியபடி ரூமுக்குள் செல்கிறார். இங்கே பாக்கியா ஏன் அத்தை இப்படி எல்லாம் பேசுறீங்க? அவங்க ஏன் ஜெனியை தள்ளிவிட போறாங்க என பேச, ராமமூர்த்தி பால் கீழே கொட்டிடுச்சி அப்ப நானும் தான் இருந்தேன். நான் துடைத்து இருக்கணும் அது நான் செய்யாம போனது என்னுடைய தப்புதான் என்று கூறுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 May 8th promo and Episode Highlights

பிறகு ரூமுக்கு வந்த ராதிகா என்னை பத்தி இவங்க எல்லாம் என்னதான் நினைச்சுட்டு இருக்காங்க? என்னை பிடிக்கல என்பதற்காக என்ன வேணும்னாலும் பேசுவாங்களா? இதை இப்படியே விடக்கூடாது என அழுதபடியே கோபிக்கு போன் போட்டு உடனடியாக பாத்துட்டு இருக்கும் வேலையை விட்டுட்டு வீட்டுக்கு வர சொல்கிறார்.

கோபி வீட்டுக்கு வரும்போது ஈஸ்வரி டென்ஷனாக இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என கேட்க, ராதிகா ஜெனியை தள்ளி விட்டதாக சொல்ல, ஈஸ்வரி சொன்னதை அப்படியே நம்பும் கோபி ராதிகாவை பார்த்து கண்டபடி திட்டுகிறார். நீ என்னதான் நினைச்சுட்டு இருக்க அப்படி என்னதான் உனக்கும் ஜெனி மீது கோபம். ஜெனி ஏதாவது பேசினா நீ இப்படியா பண்ணனும்,ஏன் ஜெனியை பிடித்து கீழே தள்ளின? என்று கேட்க ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

Baakiyalakshmi Serial 2023 May 8th promo and Episode Highlights

பிறகு ராதிகா கோபமாக நிறுத்துங்க என்று கூறி, உங்க அம்மா தான் எதுவும் தெரியாம பேசுறாங்கன்னா, நீங்களும் அவங்க சொல்றத அப்படியே நம்பிட்டு வந்து என்ன இப்படி கேக்குறீங்க? என்னை பார்த்தா உங்களுக்கு கொலைகாரி மாதிரி தெரியுதா? சொல்லுயா சொல்லு என கோபியின் சட்டையை பிடித்து கோபப்படுகிறார்.

பிறகு கோபி அதிர்ச்சியாகி நிற்க ராதிகா நடந்த விஷயத்தை சொல்ல, கோபி மன்னிப்பு கேட்க, யாருக்கு வேணும் உங்க மன்னிப்பு என்று கோபத்தோடு சத்தம் போடுகிறார். பிறகு வீட்டுக்கு வரும் ராதிகா தன்னுடைய அம்மாவிடம் நடந்த விஷயத்தை சொல்லி கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+