பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? புகைப்படத்தை வெளியிட்டு கோபி சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அதை பார்த்ததும் ரசிகர்கள் சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா? அதனால் தான் எல்லோரும் சேர்ந்து குடும்பமாக புகைப்படம் எடுத்து இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பி வரும் நிலையில் இது குறித்து இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இப்ப வரைக்கும் இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரச்சனையை வைத்து ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் குறித்த எதிர்பார்ப்பை இயக்குனர் ஏற்படுத்திவிடுகிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

அதிலும் பாக்கியா குடும்ப பெண்ணாக இருந்து தனக்கு வரும் பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்வது மற்றும் குடும்பத்திற்காக தியாகங்கள் செய்வது போன்றவற்றை பெண் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பிடித்திருக்கிறது. அதே நேரத்தில் இணையத்திலும் இந்த சீரியல் குறித்து அதிகமாக கலாய்க்கபட்டும் வருகிறது. ஒவ்வொரு முறையும் பாக்யா தன்னுடைய குடும்பத்திற்காக செய்யும் தியாகங்கள் யாராலும் செய்ய முடியாது என்று சொல்லும் வகையில் இருந்து வருகிறது.

அதேபோல இந்த சீரியலில் கோபி கேரக்டரில் வில்லனாகவும் காமெடியனாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷுக்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இவர் இந்த சீரியலில் வில்லனாக நடித்தாலும் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் இந்த சீரியலில் ராதிகாவின் குழந்தை கலைந்து போனதற்கு காரணம் ஈஸ்வரி இல்லை என்பதை பாக்கியா மயூ மூலமாக நிரூபித்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து இந்த வாரம் கோபி மற்றும் பாக்யாவிற்கு இடையே சமையல் போட்டி நடைபெறுகிறது. மறுபக்கத்தில் இனியா தன்னுடைய தோழிகளோடு பப்புக்கு சென்றிருந்த நிலையில் அங்கு போலீஸிடம் சிக்கி இருக்கிறார். இனி பாக்கியா சமையல் போட்டியில் ஜெயிக்கப் போகிறாரா? அல்லது மகளை எப்படி ஜெயிலிலிருந்து வெளியே கொண்டு வரப் போகிறார் என்று அடுத்த பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இப்படியான நிலையில் இந்த சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தில் கோபி மற்றும் பாக்யாவின் குடும்பத்தினர் எல்லோரும் இருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் கோபி பாக்கியா குடும்பத்தோடு இனி செட்டிலாகி விடுவாரா? அப்போ ராதிகா நிலைமை என்ன ஆகும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதே நேரத்தில் கோபியின் குடும்ப புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் ஒருவேளை இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதை பார்த்து பதறிப்போன சதீஷ் அதற்கு வாய்ப்பே இல்லை என்று பதில் கொடுத்து இருக்கிறார். இதுதான் இப்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+