குடும்பத்தை பிரித்த ஈஸ்வரி.. வீட்டை விட்டு போன செழியன்.. பாக்கியாவிற்காக ராதிகா எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 23ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ஜெனியை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வருவதற்காக செழியன் குடும்பத்தினர் ஜெனி வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவர்களுக்கு அவமானம் கிடைக்கிறது.
அதே நேரத்தில் பாக்யாவிற்கு கணேஷ் அடுத்த பிரச்சனையை கொடுக்க பாக்யா கலங்கி அழுது கொண்டிருக்கும் போது ராதிகா ஆறுதலாக இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் ஜெனி வீட்டிற்கு போயிருந்த பாக்யா குடும்பத்தினரை ஜெனியின் அப்பா ஜோசப் அவமானப்படுத்தி பேசிக்கொண்டே இருக்கிறார். இனி ஜெனி இங்கே தான் இருப்பா, உங்க வீட்டுக்கு அனுப்பி அவளை அழ வைக்க முடியாது என்று திட்ட, அதற்கு ஈஸ்வரியும் வழக்கம் போல திமிராக பேச ஈஸ்வரிக்கு ஜோசப்க்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகிறது.
ஒரு கட்டத்தில் ஈஸ்வரி விவாகரத்துன்னு வந்தா குழந்தை யாரு கிட்ட இருக்க வேண்டும் என்ற பேச்சு வரும் அது எங்க வீட்டு வாரிசு செழியன் கிட்ட தான் இருக்கும். நாங்களும் பார்க்க வேண்டிய இடத்தில் பாத்துக்குறோம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாக கிளம்புகிறார். அதைத் தொடர்ந்து ஜெனிக்கு உண்மை தெரிந்ததும் ஜெனி டைவர்ஸ் நோட்டீஸ் யாரை கேட்டு அனுப்பினீங்க என்று கோபப்பட அதற்கு ஜோசப் உனக்கு எதுவும் தெரியாது.

நீ நாங்க சொல்றதை மட்டும் கேளு என்று திட்டிக் கொண்டு இருக்க, அந்த நேரத்தில் செழியன் போன் செய்ய ஜோசப் போனை வாங்கி கட் பண்ணி விடுகிறார். இதை பார்த்து ஜெனி அதிர்ச்சியாகி நிற்க, அப்போது ஜோசப் இனி அவன் கிட்ட பேச கூடாது என்று போனை தூக்கிப்போட்டு உடைத்து விட ஜெனி எதுவும் பேச முடியாமல் அதிர்ச்சியாகி அழுது கொண்டே இருக்கிறார்.
மறுபக்கத்தில் வீட்டுக்கு வந்து ஈஸ்வரி இனிமேல் பேசுறதுக்கு எதுவுமே கிடையாது. நாமளே விவாகரத்து கொடுத்துட்டு செழியனுக்கு வேற ஒரு பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதுதான் என்று ஷாக்கொடுக்கிறார். இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த செழியன் ஜெனி இதுக்கு எப்படி ஒத்துக்கிட்டா நான் கேட்கணும் என்று கோபமாக வீட்டில் இருந்து அழுதபடி கிளம்பி போகிறார்.

செழியனை தொடர்ந்து எழில் கூடவே போக பாக்கியா ஒரு பக்கம் உட்கார்ந்து கண் கலங்கி அழுது கொண்டிருக்கிறார். பாக்யாவிற்கு ஆதரவாக ராதிகா பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஈஸ்வரி மற்றொரு பக்கத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார். பிறகு பாக்கியா என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கும் போது கணேஷ் போன் செய்ய பக்கத்தில் அமிர்தா இருந்து யாரு போன் பண்றாங்க என்று கேட்கிறார். அப்போது பாக்யா அது வேறு ஒருத்தங்க என்று சொல்லி சமாளித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications