ஜெனியை காப்பாற்றும் ராதிகா..பழி சுமத்தும் ஈஸ்வரி..கோபி எடுக்கும் முடிவு..பரபரப்பான திருப்பங்கள்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் எபிசோட்டின் ஹிண்ட் கிடைத்திருக்கிறது.
கோபிக்கு ராதிகா காபி கொடுப்பதை வைத்து புதியதாக பிரச்சனை ஒன்றை இனியா தொடங்க இருக்கிறாராம்.
இனியா, ராதிகா பிரச்சனை இடையில் மாட்டிக் கொண்ட ஜெனிக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட இருக்கிறதாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் இந்த வாரத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே கோபி இருக்கும் இடத்தில்தான் நானும் இருப்பேன் என்று ராதிகா பாக்கியா வீட்டிற்கு வந்திருக்கிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியில் இருக்கிறது. ஒரு பக்கம் பாக்கியா எனக்கு இந்த வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
அதேபோல கோபி நம்ம வீட்டுக்கு போய்விடலாம் என்று ராதிகாவை பல முறை கூப்பிட்டுக் கொண்டு இருந்தாலும், அதற்கு ராதிகா செவி சாய்ப்பதாக இல்லை. வீட்டில் சமையலறையிலும் பிரச்சனை செய்து கொண்டிருக்கும் ராதிகாவை எப்படியாவது துரத்தி விட வேண்டும் என்று ஈஸ்வரியும் முடிவெடுத்துக் கொண்டிருக்கிறார்.
கோபி மீண்டும் நம்மோடு வந்து விட வேண்டும். ராதிகாவை மட்டும் அவருடைய அம்மா வீட்டுக்கு அனுப்பி வைத்து விட வேண்டும் என்று ஈஸ்வரி ஒரு பக்கம் நினைத்துக் கொண்டிருக்க அதுதான் சரியான முடிவு என்று இனியாவும் கூறிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே ராதிகா தன்னை கேள்வி கேட்கிறார் என்று கோபத்தில் இருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் வீட்டிற்கே வந்த ராதிகாவை பழிவாங்குவதற்காக இனியாவும் காத்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்த வார எபிசோட்டின் ஹிண்ட் கிடைத்திருக்கிறது. அதில் காபிக்காக காத்திருக்கும் கோபிக்காக ராதிகா காபி போடுவதை தடுத்து நிறுத்தி எங்க அப்பாவுக்கு நீங்க எதற்கு காபி கொடுக்க வேண்டும் என்று இனியா பிரச்சனை செய்யப் போகிறாராம்.. அப்போது அருகில் ஜெனி நின்று கொண்டு இனியாவை திட்டி இது தேவை இல்லாத பிரச்சனை என்று கூற இருக்கிறாராம்.

அப்போது மாடிப்படியில் கால் தவறி ஜெனி கீழே விழ இருக்கிறாராம். ஜெனியை ராதிகா தான் மருத்துவமனையில் கூட்டிக்கொண்டு சேர்த்து உயிரை காப்பாற்றுகிறாராம். ஆனால் அதை புரிந்து கொள்ளாத ஈஸ்வரி கோபி இடம் ராதிகா தான் ஜெனியை கீழே தள்ளி கொலை முயற்சி செய்தால் என்று கூற இருக்கிறாராம். அதை கோபியும் நம்பாமல் இருக்கிறாராம். அடுத்து ஈஸ்வரி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்றும், அதே நேரத்தில் தன் மீது பழி சுமத்திய ஈஸ்வரியை ராதிகா எப்படி பழிவாங்க போகிறார் என்றும் இந்த வாரம் இருக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications