பாக்கியலட்சுமி.. கோபி உடைத்த உண்மை.. ராதிகா எடுத்த முடிவு! பாக்யா கண்டுபிடிக்கும் ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜனவரி 28ஆம் தேதிக்கான எபிசோடில் ராதிகா தான் ட்ரிப் செல்வதற்கு திட்டமிட்டு அதற்காக செலவழித்தது என்ற உண்மையை கோபி குடும்பத்தினரிடம் சொல்கிறார். அதைக் கேட்டு இனியா பீல் பண்ணுகிறார். ஆனால் ராதிகா முக்கிய முடிவு எடுக்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யாவின் குடும்பம் ட்ரிப் போன இடத்தில் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இனியா ஈஸ்வரியிடம் வாங்க ராட்டினத்தில் சுற்றலாம் என்று கூப்பிட்டு போகிறார். பிறகு பாக்கியா, இனியா, ராதிகா என எல்லோரும் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

television baakiyalakshmi serial vijay tv

அப்போது ராதிகா இனியாவிடம் நேற்று அப்படி நடந்து கொண்டதற்கு மன்னிக்குமாறு மன்னிப்பு கேட்கிறார். அதற்கு இனியாகவும் அதெல்லாம் பரவாயில்லை என்று சமாதானம் ஆகிறார். மேலும் உனக்கு என்ன படிக்க விருப்பமோ அதை படி. டான்ஸ்லயும் கவனம் செலுத்து என்று இனியாவுக்கு அட்வைஸ் பண்ணுகிறார்.

இதை தொடர்ந்து எல்லோருக்கும் ராதிகா சாப்பாடு ஆர்டர் பண்ணுகிறார். அவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து ராதிகாவும் சந்தோஷப்படுகிறார். இதை எல்லாம் கவனித்த பாக்கியா நீங்க ஓகே தானே ஏன் ஒரு மாதிரி இருக்குறீங்க என்று கேட்க, அதற்கு ராதிகா நான் சந்தோஷமா தான் இருக்கிறேன் வேறொன்றும் இல்லை என்று சொல்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

பிறகு எல்லோரும் விளையாடிக் கொண்டிருக்கும்போது பாக்கியா துப்பாக்கியால் பலூனை குறி பார்த்து சுட அதை கோபி ஈஸ்வரியிடம் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு ஈஸ்வரி பாக்கியா முன்ன போல இப்போ இல்லை. இப்போ சந்திர மண்டலத்துக்கே ஸ்கூட்டர்ல போயிட்டு வருவா என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.

கடைசியாக எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துவிட்டு வீட்டிற்கு வருகிறார்கள். பிறகு வீட்டிற்கு வந்ததும் ஈஸ்வரி கோபியிடம் சுற்றுலா போனது நல்லா இருந்துச்சு என்று சொல்ல, அதற்கு கோபி இன்னொரு முறை இப்படி போகனும் என்று சொல்கிறார். ஆனால் எங்க குடும்பம் மட்டும்தான் போகணும் என்று ஈஸ்வரி சொல்லிக் கொண்டு ராதிகாவை பார்க்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அதற்கு கோபி இந்த ட்ரிப் அரேஞ்ச் பண்ணியது ராதிகா தான் எல்லாமே அவதான் செஞ்சா என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவாளா? வீட்டில் நிம்மதி இல்லாமல் போனதற்கு காரணமே இவள்தான். இப்போ இவளால்தான் எல்லாரும் ட்ரிப் போனோமா என்று திட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+