பாக்கியலட்சுமி: விடுதலையான ஈஸ்வரி.. மயூவை வைத்து ராதிகா சொன்ன வார்த்தை.. பாக்யா செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 16ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மயூ சொன்ன சாட்சியை வைத்து ஈஸ்வரி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அதற்குப் பிறகு ராதிகாவின் நடவடிக்கை என்ன என்பதை பற்றி எதிர்பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மயூ சொன்ன வாக்குமூலத்தை தொடர்ந்து நீதிபதி மயூவின் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஈஸ்வரி தப்பு செய்யவில்லை என்று தெரிகிறது. அதனால் அவரை விடுதலை செய்கின்றனர். அதைத் தொடர்ந்து ராமமூர்த்தி சந்தோஷப்பட்டு கடவுள் என்னை காப்பாத்திட்டாரு என்று கண்கலங்கி கொண்டிருக்கிறார். அப்போது எழில் மற்றும் செழியன் இருவரும் ராமமூர்த்தியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது பாக்கியா அங்கு வந்து ராமமூர்த்திக்கு ஆறுதல் சொல்கிறார்.

Baakiyalakshmi Serial

ராமமூர்த்தி பாக்யாவிற்கு நன்றிகள் சொல்லிக் கொண்டிருக்க பாக்கியா நான் என்ன அடுத்தவங்களா? நீங்க என்னை அப்படித்தான் பாக்குறீங்களா மாமா? நான் என் அத்தைக்காக இதை கூட செய்ய மாட்டேனா என்று கேட்டுக் கொண்டிருக்க எழில் எப்படி உண்மையை வெளியே கொண்டு வந்தீங்க என்று கேட்க, பார்க்கில் நடந்த விஷயத்தை பாக்கியா சொல்லிக் கொண்டிருக்க பழனிச்சாமி எல்லாமே கடவுளோட அனுக்கிரகம் தான்.

அன்னைக்கு மயூக்கு மட்டும் ஸ்கூல் சீக்கிரமா விடலனா அவளை நீங்க பார்த்து இருக்க முடியாது. அந்த உண்மைகளையும் மயூ உங்களிடம் சொல்லி இருக்க மாட்டா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது எதிர்பக்கத்தில் ராதிகா, கமலா, மயூ மூன்று பேரும் நிற்கின்றனர். மயூவிடம் நன்றி சொல்லப் போக ராதிகா கோவப்பட்டு திட்டுகிறார்.

Baakiyalakshmi Serial

என்னுடைய குழந்தையை கோர்ட்டுக்கு கூட்டிட்டு வருவதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தாங்க? என் குழந்தையை நீங்க எப்படி கூட்டிட்டு வரலாம்? என்று கேட்க அதை கண்டுகொள்ளாத பாக்கியா மயூவிடம் நன்றி சொல்லிவிட்டு இருக்கிறார். அதற்கு ராதிகா இது கோர்ட்டுன்னு பார்க்குறேன் இல்லனா இங்கே நடக்கிறதே வேற என்று மிரட்டி விட்டு செல்கிறார்.

Baakiyalakshmi Serial

பிறகு கார் பக்கத்தில் வந்ததும் ராதிகா கமலாவை திட்டுகிறார். நீ பொய் கேஸ் போட்டுட்டு என்னை கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கியா? உன் பேச்சை நம்புனதுக்கு எனக்கு இவ்வளவு பெரிய அசிங்கம் தேவையா என்று திட்டிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் வீட்டில் அமிர்தாவும் ஜெனியும் ஈஸ்வரிக்கு ஆரத்தி எடுப்பதற்கு ரெடி பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

Baakiyalakshmi Serial

அப்போது ஈஸ்வரியை வீட்டிற்கு கூட்டிட்டு வந்ததும் ஆரத்தி எடுக்கின்றனர். அழுது கொண்டிருக்கும் அமிர்தாவிடம் ஈஸ்வரி ஆறுதல் சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் வருகிறார். பிறகு பாக்கியாவிடம் ஈஸ்வரி மன்னிப்பு கேட்டு கண் கலங்குகிறார். ஈஸ்வரிக்கு எல்லா வேலைகளையும் பாக்யாவே பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் ஈஸ்வரி சாப்பிடவில்லை என்பதால் பாக்கியா அவரை மிரட்டி சாப்பிட வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+