பாக்கியலட்சுமி: பெட்டியோடு போன ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுத்த பாக்யா! வசமாக சிக்கிய கோபி.. செம முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் வீட்டை விட்டு கோபி போகும் போது அவரோடு ஈஸ்வரியும் கிளம்ப அப்போது பாக்கியா எதிர்பாராத செயலை செய்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி வீட்டை விட்டு வெளியேற்றப்படுவதும் பிறகு இன்னொரு காரணம் சொல்லிக் கொண்டு கோபியும் ராதிகாவும் மீண்டும் பாக்கியா வீட்டிற்கு வருவதுதான் வாடிக்கையாக இருக்கிறது. ஏற்கனவே கோபி ராதிகாவை கல்யாணம் செய்தபோது வீட்டை விட்டு போயிருந்தார்.

பிறகு கொஞ்ச நாள் கழித்து இது என்னுடைய வீடு என்று மீண்டும் வீட்டிற்கு வந்திருந்தார். அதற்குப் பிறகு பாக்யா பணத்தை கொடுத்து வீட்டை அவர் பெயருக்கு மாற்றியதும் கோபியும் ராதிகாவும் வீட்டை விட்டு போயிருந்தனர். பிறகு கோபிக்கு நெஞ்சுவலி வந்ததால் மீண்டும் ஈஸ்வரி கோபியை வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து ராதிகாவும் கோபி இருக்கும் இடத்தில்தான் இருப்பேன் என்று பாக்யா வீட்டிற்கு வந்துவிட்டார். இப்போது ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தெரிந்ததும் கோபியை வீட்டை விட்டு துரத்துகின்றனர். ஏற்கனவே கோபி ஒருமுறை வீட்டை விட்டு போனபோது இனியா கோபியோடு போய்விட்டார் என்று ராமமூர்த்தியும் கோபி வீட்டில் போயிருந்தார்.

இந்த நிலையில் இந்த முறை கோபியின் அழுகாச்சி நாடகத்தை நம்பி ஈஸ்வரியும் பெட்டியை தூக்கிக் கொண்டு கோபியோடு போகிறார். ஆனால் தான் வீட்டை விட்டுப் போகும் போது பாக்கியா வழக்கம் போல, "சொல்லுங்க அத்தை... நான் இப்ப என்ன பண்ணனும்" என்று கேட்பார் என்று நினைத்தார் போல, ஆனால் வெளியே போய் இருந்த பாக்கியா வீட்டிற்கு வரும் நேரத்தில் கோபியோடு ஈஸ்வரி பெட்டியோடு கிளம்பும்போது சற்றும் எதிர்பார்க்காத வகையில் பாக்கியா வழி விட்டு போகலாம் என்கிற மாதிரி நின்று கொண்டு இருந்தார்.
இதை பார்த்ததும் ஈஸ்வரி கோபியை என்னால் தனியா விட முடியாது என்று சொல்ல, அதற்கு பாக்கியா நான் எதுவும் சொல்லவே இல்லையே என்று சொன்னதும் கோபி, ராதிகா, ஈஸ்வரி மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதோடு ஈஸ்வரி அப்போ நான் எப்ப வீட்டை விட்டு போவேன்னு நீ காத்துட்டு இருந்தியா?? என்று கோபியோடு கோபமாக கிளம்பி போகிறார்.

மறுபக்கத்தில் ராதிகா வீட்டிற்கு கோபி அம்மாவோடு வந்ததை பார்த்து ராதிகா அம்மா அதிர்ச்சி அடைகிறார். ஏற்கனவே ராதிகா அம்மாவிற்கும் ஈஸ்வரிக்கும் கொஞ்சம் கூட பிடிக்காது. இருவரும் மாறி மாறி சண்டை போடுவார்கள். இப்போ ஒரே வீட்டில் இருக்க போகிறார்கள். இனி ராதிகா வீட்டில் அவமானப்பட்டு ஈஸ்வரி மீண்டும் பாக்யாவிடம் வரப்போகிறார் என்று தான் தெரிகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சூட்டிங் ஸ்பாட்க்கு வந்த செய்தி.. 48 நாள் ICUவில் போராட்டம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு வந்த சோதனை! -
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications