பாக்யாவை பாடாய்படுத்திய ஈஸ்வரிக்கு இது தேவைதான்! கதறி அழும் ஜெனி.. மாட்டிக்கொண்ட கோபி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 30ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ஏற்கனவே ஈஸ்வரி கமலாவிடம் தன்னுடைய வில்லத்தனத்தை காட்டியதால் கமலா இப்போது ரிவெஞ்ச் எடுக்கிறார். இதில் கோபி மாட்டிக்கொண்டு தவியாய் தவிக்கிறார். மறுபக்கத்தில் ஜெனி அழுது கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி கோபியை வீட்டிற்கு வரவைத்து வீட்டில் நடந்ததை பற்றி அழுது புலம்புகிறார். அதோடு நான் காபியை கொட்டல கோபி, ராதிகாவோட அம்மா தான் கொட்டுனா என்று அழுது கொண்டே சொல்ல... கமலாவுக்கு ஈஸ்வரிக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. இதனால் கோபி ஈஸ்வரியை தன்னுடைய ரெஸ்டாரண்டுக்கு கூட்டிக்கொண்டு போய்விடுகிறார்.

Television Baakiyalakshmi Serial Vijay TV Entertainment

மறுபக்கத்தில் தாத்தாவின் நிலைமையை நினைத்து ஜெனி அழுது கொண்டே இருக்க செழியன் சமாதானம் செய்கிறார். அப்போது பாக்யாவும் அங்கு வந்து ஜெனிக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்கிறார். இதைத் தொடர்ந்து கோபி ரெஸ்டாரண்டில் இருக்கும்போது ஈஸ்வரி வெந்நீர் வேண்டும், காபி வேணும் என்று கோபியை நச்சரித்து கொண்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் செஃப்வந்த ஆர்டரை மாற்றி கொடுத்து விட, அவரை கோபி மிரட்டுகிறார். அதோடு அங்கிருக்கும் ஸ்டாப் எல்லாரும் சரியாக வேலை செய்யாததால் அவர்களை மிரட்டி கறாராக பேசுகிறார். அதற்கு ஈஸ்வரி இப்படி பேசாத கோபி வேலை பார்க்கிறவங்க அப்படி இப்படித்தான் இருப்பாங்க நாம தான் அவங்கள சரியா வழிநடத்தனும் என்று அட்வைஸ் சொல்லிவிட்டு நாம எப்போ வீட்டுக்கு போகலாம் கோபி எனக்கு இங்கே இருக்க கஷ்டமா இருக்கு என்று சொல்ல, சரி என்று கோபி வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்.

அந்த நேரத்தில் மயூ தான் வரைந்த படத்தை ராதிகாவிடம் காட்டிக் கொண்டு இருக்க, எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். ஈஸ்வரி திரும்பவும் வீட்டிற்கு வந்ததை பார்த்ததும் கமலா முறைத்துக் கொண்டிருக்கிறார். கோபியிடம் மயூ தான் வரைந்த ஓவியத்தை காட்ட கோபி அதை பாராட்டுகிறார். பிறகு நான் பிரஷ் ஆகிட்டு வரேன் என்று கோபி உள்ளே செல்ல ஈஸ்வரியிடம் கமலா வம்பு இழுக்கிறார்.

இதனால் ஈஸ்வரியும் அவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது கமலாவை வீட்டை விட்டு போகுமாறு ஈஸ்வரி சொல்ல, நான் எதுக்கு போகணும்? உன்னை தான் வீட்டை விட்டு துரத்திட்டாங்க என்று கமலா பதிலுக்கு சொல்ல, உனக்கு வெட்கம் இல்லையா? மருமகன் வீட்டில் வந்து இருக்கா என்று ஈஸ்வரியும் கேட்கிறார். அதற்கு கமலா நீதான் விவாகரத்தான மருமக வீட்டுல இருக்கிற என்று திட்டுகிறார்.

அதற்கு நான் ஒன்னும் ஏற்கனவே கல்யாணம் கட்டிக்கிட்டவனுக்கு என் மகளை கட்டி வைக்கல என்று சொல்ல ராதிகா அதிர்ச்சியாகிறார். இதனால் மூவருக்கும் வாக்குவாதம் தொடர அங்கு வந்த கோபியிடம் கமலாவை வீட்டை விட்டு வெளியே போகுமாறு ஈஸ்வரி சொல்கிறார். இதைக் கேட்ட ராதிகா இது என் வீடு எங்கம்மா எனக்காகத்தான் இருக்காங்க என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி கோபியிடம் அப்போ இது உன் வீடு இல்லையா? என்று கேட்டு கமலாவை வீட்டை விட்டுவிட்டு போக சொல்லு என்று பிடிவாதமாக நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+