Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராதிகாவின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய ஈஸ்வரி.. போலீஸுடன் வரும் மயூவின் பாட்டி.. அதிர்ந்த கோபி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் கழுத்தை பிடித்து ஈஸ்வரி வெளியே தள்ளும் காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வாரம் இந்த சீரியலில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பெரும் வரவேற்புள்ளது. அதிலும் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோபி குடித்துவிட்டு நடுரோட்டில் விழுந்து கிடப்பார்.

 Baakiyalakshmi serial promo from 5th june to 10th june

அவரை பாக்யா மீட்டு ராதிகாவின் வீட்டில் விட்டுச் செல்வார். அப்போது அவர் செய்யும் அட்வைஸ் ராதிகாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தும். மறுநாள் போதை தெளிந்த போது ராதிகாவும் மயூவும் பெட்டி படுக்கையை கட்டிக் கொண்டு வெளியே புறப்படுவார்கள்.

அப்போது எதுவுமே நடக்காதது போல் கோபி வந்து என்னாச்சி என கேட்பார். இதனால் ராதிகா கோபத்தின் உச்சத்திற்கு செல்வார். கோபி குடிக்கமாட்டேன் என சத்தியம் செய்தும் ராதிகா கேட்கமாட்டார். மேலும் பாக்யாவின் பெயரை மனைவி என கோபி போனில் சேமித்து வைத்ததும் பெரும் கோபத்திற்கு ஆளாகிறார் ராதிகா.

அப்போது கேப் புக் செய்துவிட்டு வெளியே போகும் போது ராதிகாவிடம் காலைபிடித்து கொண்டு கோபி கெஞ்சுவார். இந்த காட்சிகளை ஊரே வேடிக்கை பார்க்கும். அருகே உள்ள கோபியின் தாய் ஈஸ்வரி பார்த்துவிட்டு , மகனை வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார். இதை மறைந்திருந்து கேட்கும் ராதிகா நடந்தவற்றை தனது தாயிடம் கூறுகிறார். உடனே அவர் நீயும் அவருடன் அவர் வீட்டுக்கு சென்றுவிடு என ஐடியா கொடுக்கிறார்.

அன்று முதல் பாக்யா வீட்டில் ராதிகா தங்குவதால் நிறைய பிரச்சினை நடக்கிறது. இந்த வாரத்திற்கான ப்ரோமா வெளியாகியுள்ளது. அதில் ராதிகா ஈஸ்வரிக்கு காபி போட்டு வந்து கொடுக்கும் போது கோபமடைந்த ஈஸ்வரி காபியை தட்டி விடுகிறார். மேலும் ராதிகாவின் கழுத்தை பிடித்து வீட்டை விட்டு தள்ளுகிறார். அது குறித்து கோபியிடம் கூறுகிறார் ராதிகா.

உடனே அவர் ராதிகாவை வீட்டுக்குள் அழைத்து செல்கிறார். அந்த நேரம் பார்த்து ராதிகாவின் அம்மா போலீஸுடன் வந்துவிடுகிறார். அவர் ஈஸ்வரி குறித்து ராதிகாவின் அம்மா புகார் கூறுகிறார். அதற்கு பெண் போலீஸார் தொட்டு தாலி கட்டிய பிறகு அவர் கோபி இருக்கும் இடத்தில் இருப்பதுதான் நியாயம் என கூறுகிறார். இதனால் ராதிகா மீண்டும் வீட்டிற்குள் செல்கிறார். அப்போது கடுப்பாகிறார் ஈஸ்வரி. இனி இந்த வாரம் என்ன நடக்கும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+