Baakiyalakshmi: பாக்கியாவை மட்டுமல்ல ஒட்டு மொத்த ரசிகர்களையும் அழ வைத்த எழில்.. அதிர்ச்சியில் கோபி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 6ஆம் தேதி முதல் 9ம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபி எழிலிடம் மிரட்டியதால் பாக்கியா தன்னுடைய பட பூஜையில் கலந்து கொள்ளக்கூடாது என்று எழில் கூறியிருக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தியின் இறப்பிற்கு பிறகு பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லாமல் தான் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக பாக்கியாவிற்க்கு அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது என்பது போல பிரச்சினை வந்து கொண்டிருக்கிறது. பாக்யாவை பழி வாங்காமல் விடமாட்டேன் என்று கோபி சபதம் எடுத்து பல சூழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

இதில் இருந்து பாக்கியா தப்பிப்பாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே தன்னுடைய சூழ்ச்சியால் செழியன் மற்றும் இனியாவை தன் வசப்படுத்தி இருக்கிறார். இனியா எத்தனை முறை அவமானப்பட்டாலும் பிரச்சனையில் சிக்கினாலும் திருந்தாமல் பாக்கியவை உதறி தள்ளி விட்டு கோபியோடு சேர்ந்து இருக்கிறார்.

அதுபோல இப்பொழுது எழிலையும் பாக்கியாவிடமிருந்து பிரிக்க வேண்டும் என்று கோபி முயற்சி செய்திருக்கிறார். அதாவது எழில் புதியதாக படம் இயக்க இருக்கும் நிலையில் ஒரு புரொடியூசர் இடம் தன்னுடைய மகனுக்காக முதலில் பேசிய கோபி தன்னுடைய மகன் நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட பாக்யாவை அவமானப்படுத்த வேண்டும் என்று தான் எழிலுக்காக பேசியிருக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அதாவது எழில் படத்திற்கான பூஜை நடக்கும் இடத்தில் பாக்கியா வரக்கூடாது என்று ப்ரொடியூசர் மூலமாக கோபி எழிலிடம் சொல்ல சொல்லி இருக்கிறார். இப்படியான நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் எழிலிடம் உங்க அம்மா இந்த பட பூஜைக்கு வந்தால் உனக்கு படமே கிடையாது. நீ வாழ்க்கையில் படமே பண்ண முடியாது என்று மிரட்டுகிறார்.

இதனால் அதிர்ச்சியில் எழில் நின்று கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அவசர அவசரமாக ஓடிவரும் பாக்யா எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சா நான் கரெக்டான நேரத்திற்கு வந்துவிட்டேனா? வா உள்ளே போகலாம் என்று கையை பிடித்துக் கொண்டு பூஜை நடக்கும் இடத்திற்கு கூட்டி செல்ல எழில் நீ வர வேண்டாம் நீ வந்தா எனக்கு படபூஜை நடக்காது நீ வெளியே போமா என்று சொல்ல இதை சற்றும் எதிர்பார்க்காத பாக்கியா வாசலில் நின்று அழுது கொண்டிருக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

கோபி தான் ஜெயித்து விட்டதாக சந்தோஷத்தில் இருக்கிறார். அந்த நேரத்தில் படத்திற்கான பெயர் திறந்து வைக்கப்படுகிறது. அங்கு பாக்கியலட்சுமி என்று பெயரில் தான் எழில் படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார். இதை வெளியே இருக்கும் போர்டில் பார்த்த பாக்கியா கதறி அழுது கொண்டிருக்கிறார். இந்த ப்ரோமோ பார்க்கும் ரசிகர்களையும் பீல் பண்ண வைத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+