ராதிகாவை அழ வைத்துவிட்டு ஜெனி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ.. குடும்பமே இப்படியா பண்ணுவாங்க?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் சூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அதில் ஜெனி, அமிர்தா, இனியா மூவரும் நிலா பாப்பாவோடு சிக்கு புக்கு ரயிலு விளையாட்டு விளையாடி வருகிறார்கள்.
இந்த வீடியோவிற்கு அதிகமான ரசிகர்கள் ராதிகாவிற்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அனைத்து தரப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே பாக்கியா தான் கதாநாயகியாக பலருடைய மனதையும் கவர்ந்து இருக்கிறார். ஆனால் ஒரே நாளில் ராதிகா இப்போது மொத்த ரசிகர்களின் அனுதாபத்தையும் அள்ளி சென்றிருக்கிறார்.
ஆரம்பத்தில் ராதிகாவும், பாக்கியாவும் நெருங்கிய தோழிகளாக இருந்து பிறகு இவர்கள் இருவருடைய வாழ்க்கையிலும் கோபி செய்த சூழ்ச்சியால் எதிரியாக மாறிவிட்டனர். ஆரம்பத்தில் பாக்யா வெகுளி என்று கூறிக் கொண்டிருந்த ராதிகாவே கோபியின் பேச்சை கேட்டு பாக்கியா நடிக்கிறார், ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று அவரைப் பற்றிய அதிகமாக பேசி பலருடைய கோபத்தையும் திட்டல்களையும் ராதிகா வாங்கிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது யாரும் எதிர்பாராத பல பரபரப்பான தருணங்கள் நடைபெற்று வருகிறது. வீட்டில் கீழே வழுக்கி விழுந்த ஜெனிக்கு உதவி செய்த ராதிகாவை புரிந்து கொள்ளாத ஈஸ்வரி நீதான் ஜெனியை கீழே தள்ளி விட்டாயா? என்று மனதை காயப்படுத்தி விட்டு, கோபி இடமும் ராதிகா தான் செய்தார் என்று ஏற்றிவிட்டு அதனால் கோபி மற்றும் ராதிகா இருவருக்கும் சண்டை சச்சரவு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் பாக்யா ராதிகாவை புரிந்து கொண்டு ராதிகாவுக்கு நன்றி கூறி இருக்கிறார். இதனால் பாக்யாவும் ராதிகாவும் மீண்டும் இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. அதே நேரத்தில் தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் ஜெனி, அமிர்தா, இனியா மூவரும் நிலா பாப்பாவோடு விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் ராதிகாவை மாட்டி விட்டுவிட்டு வயிற்றில் குழந்தையோடு நீங்க இப்படி ஓடிப் பிடித்து விளையாடுறீங்களே என்று கலாய்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications