பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?
சென்னை: தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது இறுதிச்சடங்கை சுற்றியும் பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழத் தொடங்கியுள்ளன.
தேனியில் அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதிச்சடங்கில் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் அதே நேரத்தில், குடும்ப உறுப்பினர்களைச் சுற்றி சில வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வைரலாகும் வீடியோ
சமூக வலைதளங்களில் பரவி வரும் சில வீடியோக்களில், பாரதிராஜாவின் மகள் ஜனனி, கூட்டத்தில் அமர்ந்திருந்த பாரதிராஜாவின் மருமகள் நந்தனாவின் கையைப் பிடித்து இழுத்து, அந்த இடத்தை விட்டு போகுமாறு சொல்வது போல இருக்கிறது. உடனே நந்தனா அந்த இடத்தை விட்டு கிளம்ப அப்போது ஜனனி நந்தனாவின் கைகளை முறுக்கியது போல காட்சிகள் இருக்கிறது. இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டிருக்கிறது.
அப்போது அங்கிருந்த நடிகை ராதிகா சரத்குமார் சென்று சூழ்நிலையை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார். ஜனனியிடம் அவர் அமைதியாக இருக்க சொல்ல, அதற்கு ஜனனி கோபப்பட்டு கத்துவது போன்ற காட்சிகளும் இருக்கிறது. பிறகு தன்னுடைய இரண்டு மகள்களுடன் அங்கிருந்து அழுதபடியே நந்தனா வெளியே சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த வீடியோவின் முழுமையான பின்னணி என்ன? உண்மையில் என்ன நடந்தது? என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
நந்தனா வெளியேறினாரா?
இறுதிச்சடங்கின்போது ஏற்பட்டதாக கூறப்படும் அந்த சம்பவத்திற்குப் பிறகு, பாரதிராஜாவுக்கு இறுதி சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது பாதியிலேயே நந்தனா தனது இரண்டு மகள்களுடன் அழுதபடியே அங்கிருந்து வெளியேறியதாகவும் சில சமூக வலைதள பதிவுகள் கூறுகின்றன. ஆனால் இதுகுறித்தும் குடும்பத்தினர் தரப்பில் எந்த விளக்கமும் வெளியாகவில்லை. இதனால் உண்மை எது, வதந்தி எது என்பது இன்னும் தெளிவாகவில்லை.
கங்கை அமரன் பேசிய வார்த்தைகள்
இந்த சூழ்நிலையில்தான் இயக்குநர் கங்கை அமரன் இறுதிச்சடங்கில் பேசிய வார்த்தைகளும் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. "கடைசியில் அவரை தனியாக விட்டுட்டீங்களே..." என்ற அவரது ஆதங்கம் கலந்த கருத்து சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வார்த்தைகள் வெறும் நண்பரின் துயர வெளிப்பாடா? அல்லது குடும்ப சூழ்நிலைகளை பார்த்து வந்த வேதனையா? என்ற கேள்விகளையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.

சொத்து விவகாரம் குறித்து தொடரும் பேச்சு
பாரதிராஜாவின் மறைவுக்கு பிறகு, அவரது சொத்துக்கள், வாரிசுகள், குடும்ப உறவுகள் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சில யூடியூப் சேனல்கள் மற்றும் தனிப்பட்ட கருத்தாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசிவருகின்றனர். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாதவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி
பாரதிராஜா போன்ற ஒரு மாபெரும் கலைஞரின் மறைவுக்குப் பிறகு, அவரது சாதனைகள் மற்றும் சினிமாவுக்கான பங்களிப்புகளை பேசுவதற்கு பதிலாக, குடும்ப விவகாரங்கள் அதிகம் பேசப்படுவது ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
"கருத்தம்மா, முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே போன்ற படைப்புகளை தந்த ஒரு மகத்தான கலைஞரை அவரது சாதனைகளுக்காக நினைவுகூர வேண்டும்" என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது.
இதற்கிடையில் வைரலாகும் வீடியோக்கள், கங்கை அமரன் பேசிய வார்த்தைகள், சொத்து விவகாரம் குறித்த பேச்சுகள் என பாரதிராஜாவின் மறைவுக்கு பிறகும் அவரைச் சுற்றிய விவாதங்கள் ஓயாமல் தொடர்கின்றன. ஆனால் இந்த விவகாரங்கள் குறித்து குடும்பத்தினர் தரப்பில் ஏதேனும் விளக்கம் வருமா என்பதுதான் தற்போது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
2 வருஷமா போராட்டம்.. 3 மாசத்துக்கு முன்பு பேசினேன்! அப்போது கூட.. பாரதிராஜா பற்றி நெப்போலியன் உருக்கம் -
"பாரதிராஜா முகத்தை பார்த்ததும் கதறி அழுத வடிவேலு"... நடையில் தெரிந்த மாற்றம்! தேனியில் கண்கலங்க வைத்த காட்சி! -
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல் -
"இனி யாரோடு பாடுவேன்? பாரதிராஜாவை சிரிக்க வைத்த வீடியோவை பகிர்ந்து உருகிய வைரமுத்து!" ரசிகர்கள் ஆறுதல் -
"இந்த உலகத்தை விட்டு போக பயமாக இருக்கிறது..." ஏனென்றால்! மறைவுக்கு முன் பாரதிராஜா சொன்ன வார்த்தை -
பாரதிராஜா இறுதி சடங்கிற்கு பிறகு மனைவி வெளியிட்ட உருக்கமான அறிக்கை.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள் -
பாக்ஸுக்குள் இருந்த வைரக்கல்... பாரதிராஜாவின் அந்த ஒரு முடிவால் ராதாரவிக்கு ஏற்பட்ட வருத்தம் என்ன? -
அது நடக்காமலேயே போயிடுச்சு.. பாரதிராஜாவிற்கு தேனியில் அஞ்சலி செலுத்திய கருணாஸ் உருக்கமான பேட்டி -
"என் குருநாதர்.. என்னால வர முடியாம போச்சு.." பாரதிராஜா மறைவு.. கண் கலங்கிய நெப்போலியன்.. அஞ்சலி! -
பாரதிராஜாவின் கடைசி நிமிடங்கள்.. தேனி தோட்டத்தில் கலங்கிய பிரபலங்கள்! காற்றில் கலந்த இயக்குனர் இமயம் -
பாரதிராஜா உடலுக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! அமைச்சர் ராஜ்மோகன் தகவல் -
சொந்த மண்ணை நோக்கி தொடங்கியது பாரதி ராஜாவின் இறுதி பயணம்! நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி














Click it and Unblock the Notifications