“எப்படி உங்களுக்கெல்லாம் பைத்தியம் பிடிக்காம இருக்கு?”.. அனந்த் வைத்தியநாதன் ஆச்சர்யம்!
பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்று போட்டியாளர்களிடம் பேசினார் அனந்த் வைத்தியாநாதன்.
சென்னை: பிக் பாஸ் இறுதிச்சுற்றிற்கு வந்த போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் வாய்ஸ் எக்ஸ்பர்ட் அனந்த் வைத்தியநாதன்.
பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றவர் வாய்ஸ் எக்ஸ்பர்ட் அனந்த் வைத்தியநாதன். வீட்டிலேயே அதிக வயதானவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, மற்ற போட்டியாளர்களுடன் அவரால் ஜாலியாக பேசிப் பழக இயலவில்லை.
இதனாலேயே எப்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் என ஆவலாக அவர் காத்திருந்தார்.
பொறுமைய சோதித்த பிக் பாஸ்
ஆனாலும் அவர் பொறுமையைச் சோதிப்பது போல் அவரை நான்கு வாரங்கள் பிக் பாஸ் வீட்டிலேயே தங்க வைத்தார் பிக் பாஸ். பின் நான்காவது வாரம் அவர் வீட்டில் இருந்து வெளியேறினார்.
போட்டியாளர்களுக்கு வாழ்த்து
இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய மற்ற போட்டியாளர்களுடன் விருந்தினராக நேற்று அவர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது பைனலில் இருக்கும் நான்கு பெண் போட்டியாளர்களுக்கும் அவர் வாழ்த்துக்கள் கூறினார்.
பாலாஜியின் மாற்றம்
மேலும், 'பாலாஜியின் மாற்றம் மிகப்பெரிய அதிசயம்' எனப் பாராட்டிய அவர், இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற அனைவருக்கும் வெளியே வந்தவுடன் நல்ல எதிர்காலம் காத்திருப்பதாகவும் கூறினார்.
பைத்தியம் பிடிக்கலையா
அதோடு, ‘இத்தனை நாள் தாக்குப்பிடித்து உங்களால் எப்படி இந்த வீட்டில் இருக்க முடிந்தது?' என்று கேட்ட அனந்த், ‘எப்படி உங்களுக்கு பைத்தியம் பிடிக்காமல் உள்ளது?' என்றும் ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டார். மேலும், ஐந்து வாரங்களுக்கு மேல் தான் அந்த வீட்டில் இருந்திருந்தால், சுவற்றை உடைத்தாவது வெளியேறியிருப்பேன்' என நகைச்சுவையாகக் கூறினார்.