Bigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி அந்த டிவியின் மற்ற நிகழ்ச்சிகளை விட அதிகப் பார்வையாளர்களை பெறவில்லை என்பதுதான் உண்மை.
எல்லாரும் ஆட்கள் குறைய குறைய நிகழ்ச்சி போரடிக்குது என்று, பெரும்பாலானவர்கள் நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை. இன்னும் மூன்று வாரம் சீக்கிரம் போய்விடாதா என்று கூட மலைக்க வைக்கிறது.
எல்லாரையும், எல்லார் வீட்டாரும் வந்து பார்த்துவிட்டு போயாச்சு. சொல்ல வேண்டிய அறிவுரைகளை சொல்லிட்டுப் போயிட்டாங்க. இதில் லாஸ்லியாவுக்கு அவங்க அப்பா சொன்ன அட்வைஸ்தான் மகுடம்.
கவின் ஏன்?
பத்து வருஷமாக பார்க்காத இருந்த பெண்ணை, பிக் பாஸ் வீட்டினுள் வந்து பார்க்கிறார் அப்பா. எத்தனை மன உளைச்சலுடன் வந்திருப்பார். முதலில் என்ன செய்துகிட்டு இருக்கேன்னுதான் ஒரு கேள்வி கேட்டார்.இது பெண்களைப் பெற்ற எல்லா அப்பாக்களுக்குமான பெரும் ஷாக். லாஸ்லியா எப்படி வேதனை பட்டு இருப்பார்.
காதலுடன் பேச்சு
அன்னிக்கு என்னவோ என்னாலதான் எல்லாம் என்று கதறி கண்ணீர் விட்டார்.நேத்து மீண்டும் தனது சில்மிஷத்தை ஆரம்பிச்சுட்டார்.இவருக்கு எப்படி இத்தனை நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்?ஆச்சரியம்தான். முகத்தை உம்முன்னு வச்சுக்கிட்டு, அன்னிக்கு ஒரு வார்த்தை சொன்னே அதோடேயே முடிச்சுக்கிட்டு இருந்திருக்கலாம். இவ்வளவு தூரம் கொண்டு வந்துட்டு,இப்போ இப்படி நடந்துகிட்டா எப்படின்னு இன்னும் லாஸுடன் காதலைத் தொடரும் முயற்சியில் இருக்கார். .
அக்கா தங்கை
கவின் உனக்கு அக்கா தங்கை இல்லையா? லாஸ் எப்படி தெளிவாகி இருக்கார்... அவரை மன குட்டையை குழப்பி, இன்னும் காதல் என்கிற மீனை பிடிப்பதில் குறியாக இருக்கிறீர்களே.. எத்தனை பெண்கள்தான் வேணும் உங்களுக்கு? லிவிங்க் டுகெதர்ல வாழ்ந்தாச்சு..இங்கேயும் சாக்ஷியுடன் நூல் விட்டாச்சு. லாஸுக்கு நெருக்கமாகி காதல் என்று விழ வச்சாச்சு,
நூல் இன்னும்
யாரை சொல்றேன்னு இன்னும் உனக்கு புரியலையான்னு சேரன் சாரை வேறு இழுக்கிறார். என்னங்க உங்க குணம்? இத்தனை இழிவான குணத்தில் எப்படி பெரிய ஆளா ஆனீங்க கவின். இது என் கேள்வி அல்ல, பொது மக்கள் கேள்வி. லாஸ்லியா நார்மல் நிலைமைக்கு வந்துட்டார். இப்போது வேணும்னே லாஸை வெறுப்பேத்த ஷெரீனுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறார். ஷெரீன் நன்றாக விளையாடுவது கவினுக்கு பிடிக்கலையா, இல்லை இவரை வச்சு பிக் பாஸ் வீட்டில் தங்கிக்கலாம் என்று நினைக்கிறாரோ என்னவோ.
மக்களே தயவு செய்து ஓட்டு போடுவதற்கு முன் யோசித்து போடுங்கள்!