பிக் பாஸ் தமிழ் 5: பிரியங்காவுக்காக கமல் கொடுத்த கிப்ட்.. விளக்கம் வேற லெவல்
சென்னை: பிக் பாஸ் இறுதிப்போட்டியில் பிரியங்கா விற்காக கமல் கொடுத்த பரிசு பிரியங்காவை சிலிர்க்க வைத்துள்ளது.
பிரியங்காவே எதிர்பார்க்காத அவருடைய எதிர்பார்ப்பை கமல் நிறைவேற்றி ஆசீர்வாதங்களை தெளித்துள்ளார்.
பிக் பாஸ் கிராண்ட் பினாலே :உள்ளே கிடைத்த அறிவால் வெளியே தைரியம் அதிகமாயிடுச்சி...உறுகிய இசைவாணி
பிரியங்காவிற்கு கிடைத்த பரிசு
பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் போட்டியாளர்களில் இறுதி நிலையில் நிலைத்திருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் பிரியங்கா. பிரியங்காவிற்கு கமல் கொடுத்த பரிசு பிரியங்காவை மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களையும் எனர்ஜி அடைய செய்துள்ளது. தற்போது நடந்து கொண்டிருக்கும் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு கிடைத்த பெரிய பொக்கிஷமாக அதை அவர் பெருமைப் படுத்தி உள்ளார்.
இறுதிப்போட்டி போட்டியாளர்கள்
அக்டோபர் 3, 20201 அன்று தொடங்கப்பட்ட பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தற்போது 100 நாட்களை கடந்து இன்று இறுதிப்போட்டி நிலைக்கு வந்துள்ளது. இதில் ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிரூப், பிரியங்கா, அமீர், ராஜு, பாவனி ஆவார்கள் .அவர்கள் அனைவருக்கும் இன்று கமல் நினைவு பரிசுகளை வழங்கி வருகிறார். அதில் போட்டியாளர்களுக்கு பிடித்த மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமையும் படி பல பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் பிரியங்காவிற்கு கமல் கொடுத்த பரிசுதான் வேற லெவல் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பிரியங்காவின் அதிர்ச்சி
தற்போது இன்று ஞாயிற்றுக்கிழமை ஆறு முப்பதுக்கு ஒளிபரப்பப்பட்டு ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் கமலும் கலக்கலாக உடை அணிந்து இந்த நிகழ்ச்சிக்கு கலகலப்பு ஊட்டிருக்கிறார். கமல் தன்னுடைய ஆசீர்வாதங்களை கிப்டாக போட்டியாளர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் போது, பிரியங்காவிற்கு கொடுத்த கிப்ட் பிரித்து பார்க்கும் படி கூறியுள்ளார். வழக்கம்போல பிரியங்கா அதைப் பிரித்துப் பார்ப்பதற்கு முன்பே குலுக்கி பார்த்து கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து பலரும் சிரித்துக் கொண்டு இருந்தாலும் கிப்டை திறந்து பார்த்ததும் பிரியங்கா அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
கமல் கொடுத்த விளக்கம்
கோல்ட் கலரில் மைக் பொருத்தப்பட்ட சீல்ட் பிரியங்காவுக்காக வழங்கப்பட்டது. அதை கொடுத்த கமல் இது உங்களுடைய தனிப்பட்ட திறமைக்காக நான் கொடுத்தது. இது மட்டும்தான் உங்களுக்கு என்று இல்லை...உங்களுடைய தனித்திறமை சிறப்பாக இருக்கிறது. அதன் இதன் மூலம் பலருடைய மனதையும் கவர்ந்து இருப்பதால் இந்த கிப்ட் நான் உங்களுக்கு கொடுக்கிறேன் என்று விளக்கமும் கொடுத்துள்ளார். இதனை மிகவும் சந்தோஷமாக பெற்றுக் கொண்ட பிரியங்கா அவருக்கு நன்றிகளையும் கூறியுள்ளார்.