பார்வதிக்கு ரெட் கார்டு கொடுக்க உண்மை காரணம் இதுதானா? கேமராவுக்கு பின்னாடி விஜய் சேதுபதி போட்ட சண்டை!
சென்னை: விஜய் டிவி பிக் பாஸ் தமிழ் சீசன் 9 குறித்து கடந்த சில நாட்களாக பேசப்படாத விஷயமே இல்லை. குறிப்பாக, கம்ருதீன் - பார்வதி - சான்ட்ரா சம்பவம் நிகழ்ச்சியை பார்க்காதவர்களையும் கூட பிக் பாஸ் ஸ்கிரீன் முன்னால் கொண்டு வந்துவிட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் காரில் வைத்து சான்ட்ராவை கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் தள்ளிவிட்ட சம்பவம், பார்ப்பவர்களையே பதட்டப்படுத்தும் அளவுக்கு சென்றது. அந்த சண்டை ஒளிபரப்பானதுமே, "இவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும்" என்று ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை ஒரே குரலில் பேச ஆரம்பித்தனர்.

குரல் கொடுத்த தருணம்
இந்த சீசனில் இதுவரை பிக் பாஸ் பார்க்காதவர்களே கூட, அந்த காட்சிகளை பார்த்து "இவர்களுக்கு உடனே ரெட் கார்டு கொடுக்கணும்" என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டது தான் ஆச்சரியம். ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் - எங்கு பார்த்தாலும் இதே விவாதம் தான்.
எதிர்பார்த்தது போல வந்த ரெட் கார்டு
நேற்று அனைவரும் எதிர்பார்த்தபடியே, கம்ருதீன் மற்றும் பார்வதி இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து விஜய் சேதுபதி வெளியே அனுப்பிவிட்டார். ஆச்சரியம் என்னவென்றால், ரெட் கார்டு கொடுத்த பிறகு அவர்களிடம் விஜய் சேதுபதியும் பிக் பாஸும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பே, இருவரும் ஜாலியாக டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர். ஆனால், சில நிமிடங்களில் நிலைமை முழுக்க மாறி, விஜய் சேதுபதி கடுமையாக கண்டித்ததும், சான்ட்ராவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட காட்சிகள் பார்ப்பவர்களை உறைய வைத்தது. அந்த நேரத்தில் சான்ட்ரா கதறி அழுததும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இது அழுகையா நடிப்பா
ஒருபக்கம், "சான்ட்ராவுக்காக தான் இந்த ரெட் கார்டு" என்று மக்கள் நிம்மதி அடைந்தாலும்,
மற்றொரு பக்கம், "சான்ட்ரா தொடர்ந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்வது நாடகம் போல இருக்கிறது" என்ற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இதனால், இந்த சம்பவமே ஒரு புதிய சர்ச்சையாக மாறியுள்ளது.
பிக் பாஸ் டீம் போட்ட பிளான்
பிக் பாஸ் சம்பந்தமாக உள்ளிருப்பவர்களிடம் பேசும்போது கிடைத்த தகவல்களின்படி, பார்வதியை உடனடியாக வெளியேற்ற பிக் பாஸ் டீம் முதலில் சம்மதிக்கவே இல்லை என கூறப்படுகிறது. காரணம், கம்ருதீன் - பார்வதி இருவரை வைத்து தான் நிகழ்ச்சியில் தேவையான "கண்டென்ட்" கிடைத்துக் கொண்டிருந்தது.
"ஒரு படம் ஹிட் ஆக வில்லன் முக்கியம்" என்பதுபோல், இவர்களின் வில்லத்தனத்தால் தான் மற்ற போட்டியாளர்கள் ஹீரோவாக மாறிக் கொண்டிருந்தார்கள் என்பதும் பிக் பாஸ் கணக்கு. அதனால், கம்ருதீனுக்கு மட்டும் ரெட் கார்டு கொடுத்து அனுப்பி, பார்வதியை வைத்து மீதமுள்ள இரண்டு வாரங்களையும் ஓட்டலாம் என்ற பிளான் இருந்ததாகவும் பேசப்படுகிறது.
விஜய் சேதுபதி வைத்த கண்டிஷன்
ஆனால், "எனக்கு அதிகமான மெயில்களும் மெசேஜ்களும் வருகிறது" என்று சொல்லி, விஜய் சேதுபதி தான் பார்வதிக்கும் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று உறுதியாக நின்றாராம். "அப்படி செய்யவில்லை என்றால், இதற்கு முந்தைய சீசன் போல சில நாட்களுக்கு வேறு ஒருவரை வைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குங்கள். இந்த சீசனிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்" என்று கூட அவர் சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தான் பார்வதிக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முடிந்தது ஒரு அத்தியாயம்
இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த இந்த விவகாரம், ஒரு முழு பிரளயம் முடிந்தது போல அமைந்துள்ளது. இனி பார்வதி அல்லது கம்ருதீன் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், அவர்கள் வீடியோ வெளியிடக் கூடாது என்று ரூல்ஸ் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதோடு, பிக் பாஸ் கொண்டாட்டம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் இவர்கள் இருவரும் இனி கலந்து கொள்ள முடியாது என்றும், வீட்டிற்குள் விளையாடிய 90 நாட்களுக்கான சம்பளமும் கிடைக்காது என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பொதுவாக, நிகழ்ச்சி முடிந்து 100 நாட்கள் கழித்தே சம்பளம் வழங்கப்படும் நிலையில், இவர்கள் இருவருக்கும் அந்த வாய்ப்பும் இல்லை என்கிறார்கள்.
கம்ருதீனுக்கு மட்டும் ரிலீஃப்
இதற்கிடையில், கம்ருதீன் மீண்டும் மகாநதி சீரியலில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. காரணம், அவருக்கு ரெட் கார்டு கிடைத்தது பிக் பாஸில் தான்; சீரியலில் இல்லை என்பதால், அந்த வாய்ப்பு தொடரலாம் என சேனல் தரப்பில் பேசப்படுவதாக தகவல்.
இன்னொரு வெளியேற்றம்
இதையெல்லாம் தாண்டி, இன்றைய எபிசோடில் சுபிக்ஷா வெளியேற்றப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால், பிக் பாஸ் சீசன் 9 ரசிகர்களுக்கு அமைதியே இல்லாத நிலை தான்.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications