Bigg Boss: சனிக்கிழமை விஜய் சேதுபதி ரோஸ்ட்.. இவங்களுக்கு மட்டும் தான்! ரசிகர்கள் குமுறல் கேட்டிடுச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டிசம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி ஒரு சில பாண்டியாளர்களுக்கு மட்டும் அதிகமாக ரோஸ்ட் செய்து இருக்கிறார். அதுவும் ரசிகர்கள் இந்த வாரம் விஜய் சேதுபதி கேட்க வேண்டும் என்று சொன்ன கேள்விகளை எல்லாம் அடையாளப்படுத்தி இருக்கிறார்.

இந்த வாரத்தில் முதல் நாள் திங்கள்கிழமையில் தொடங்கி நேற்று வெள்ளிக்கிழமை வரைக்கும் வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதி என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது. காரணம் இந்த வாரம் முழுக்கவே போட்டியாளர்கள் விளையாடிய விளையாட்டு அப்படி இருந்தது.

Television Bigg Boss Tamil 8 Bigg Boss 8

எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதை சுவாரசியமாக செய்யாமல் சண்டை சச்சரவுகளோடு செய்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் இந்த முறை அடிதடியிலும் இறங்கி இருந்தார்கள். அதிலும் சிலர் அடியே படாமல் தலை போச்சே... கால் போச்சே என்று கதறியவர்களையும் பார்க்க முடிகிறது. ஆனால் ராணவிற்க்கு அடிபட்ட போது கூட அவர் நடிக்கிறார் என்று ஏளனம் செய்வதையும் பார்க்க முடிந்தது.

இதனால் இந்த வாரம் கண்டிப்பாக குறும்படம் போட வேண்டும், இல்லை என்றால் உள்ளே சில போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து கேள்வி கேட்க வேண்டும் என்று அதிகமான ரசிகர்கள் இணையத்தில் குரல் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்படியே இன்று எபிசோடு ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் விஜய் சேதுபதி கேள்விகளால் சில போட்டியாளர்களை துளைத்து எடுத்தார்.

அதிலும் அன்ஷிதா, ஜெஃப்ரி, விஜே விஷாலுக்கு தான் இன்று ரோஸ்ட் அதிகமாக இருந்தது. வழக்கம் போல அருணை திட்டி இருந்தாலும் சில இடங்களில் அவரின் நடவடிக்கையை பாராட்டியும் இருந்தார். ராணவ் கீழே விழுந்து கையில் சதை முறிவு ஏற்படுவதற்கு முக்கிய காரணமே அருண்தான். அதையும் அம்பலப்படுத்தி இருந்தார்.

அதோடு ராணவிற்க்கு அடிபட்ட பிறகும் சிலர் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் முதல் ஆளாக அருண் ஓடியது குறித்து பாராட்டவும் செய்தார். ஆனால் கடைசியில் போகிற போக்கில் என்ன சார் உங்க ட்ரெஸ்ஸில் எப்போவும் ஹார்ட் பறக்கும் இந்த முறை எதுவும் தப்பா போயிருக்கிறதா? டிரஸ்ஸில் மாற்றம் தெரிகிறது என்று அருண் மனதை குழப்பமடையும் வகையில் பேசி இருந்தார்.

அதுபோல அன்ஷிதாவிடம் ராணவ் விஷயத்தில் நடந்து கொண்டது குறித்து கேள்வி எழுப்பி திட்டி இருந்தார். அதுபோல குரூப்பாக சேர்ந்து விளையாடியது குறித்தும் கேள்வி மேல் கேள்வி கேட்டிருந்தார் இதுவரைக்கும் நான் எல்லோருக்காகவும் தியாகி போல நடப்பேன், தேவதை போல இருப்பேன் என்று சொன்ன அன்ஷிதா எங்கே என்று முகத்துக்கு நேராகவே கேள்வி கேட்டிருந்தார்.

அதுபோல விஜே விஷால் கேப்டன்சி ரொம்ப கேவலமாக இருந்தது என்றும் விமர்சித்திருக்கிறார். விஜய் சேதுபதி இன்று போட்ட போடில் எல்லா போட்டியாளர்களும் பதறிப் போய் இருக்கிறார்கள் அடுத்த வாரத்தில் இவர்களின் விளையாட்டு எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+