Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக்பாஸ் சீசன் 7 : ஒரே நேரத்தில் இருவர் அவுட்.. யார் இவர்களா? பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுகிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இது தற்போது சீசன் 7 நடந்து வருகிறது. 100 நாட்களுக்கு மேல் இந்த வீட்டில் யார் தங்குகிறார்களோ மக்களின் வாக்குகளின் அடிப்படையில் அவர்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.

இதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் 18 போட்டியாளர்கள் வந்தனர். அவர்களில் வாரம் ஒருவர் மக்களின் வாக்குகளில் யாருக்கு ஓட்டு குறைவாக இருக்கிறதோ அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

Biggboss season 7 double eviction today

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கிய நிகழ்ச்சியில் முதல் வாரம் அனன்யா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அவர் வெளியேறிய மறுநாளே பவா செல்லத்துரை தானாக விரும்பி வெளியேறியுள்ளார். இதையடுத்து மூன்றாவது வாரம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். தற்போது 4 ஆவது வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

15 போட்டியாளர்கள் கடுமையாக போட்டியிட்டு வருகிறார்கள். இது போதாமல் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 5 பேர் நுழைகிறார்கள் என கமல்ஹாசன் ப்ரோமோவில் தெரிவித்திருந்தார். பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியில் ஒருவர்தான் வருவார்கள். ஆனால் தற்போதுள்ள போட்டியாளர்கள் யாரும் சரியாக கன்டென்ட் தரவில்லை என கருதப்படுகிறது.

இதனால் ஒரு 5 பேரை வைல்ட் கார்டு என்ட்ரியாக அனுப்ப பிக்பாஸ் டீம் முடிவு செய்துள்ளது. இதுதான் பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறை என சொல்லப்படுகிறது. இந்த முறை குறைந்த வாக்குகளுடன் கூல் சுரேஷ், விஷ்ணு, மாயா, சரவண விக்ரம், அக்சயா ஆகியோர் உள்ளனர். இதில் டேஞ்சர் ஜோனில் வினுஷாவும் யுகேந்திரனும் உள்ளனர்.

எனவே இந்த வாரம் வினுஷா, யுகேந்திரன் ஆகிய இரு போட்டியாளர்கள் வெளியேற்றபடுவார்கள் என தெரிகிறது. அப்படி வெளியேறினால் போட்டியாளர்களின் எண்ணிக்கை 13 ஆக குறைந்துவிடும். இதையடுத்து வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 5 பேர் சேர்க்கப்பட்டால் மீண்டும் 18 போட்டியாளர்கள் என்ற அளவில் பிக்பாஸ் வீட்டில் காணப்படும்.

Biggboss season 7 double eviction today

வைல்டு கார்டு என்ட்ரி மூலம் விஜயகுமாரின் கடைசி மகள் ஸ்ரீதேவி உள்ளே வருகிறார் என்கிறார்கள். அவர் உள்ளே வந்தால் ஏற்கெனவே வீட்டிற்குள் வனிதா மகள் ஜோவிகா இருக்கிறார். அவர் ஏற்கெனவே மக்களின் பாராட்டுகளையும் கண்டனங்களையும் சில விவகாரங்களில் பெற்று வருகிறார். பெரியவர்களையும் மரியாதை இல்லாமல் பேசுகிறார் என்கிறார்கள்.

இந்த நிலையில் சித்தி ஸ்ரீதேவி வந்தால் ஜோவிகா அவருடன் ஒத்து போவாரா, பிரிந்து கிடக்கும் தனது அம்மாவை அவருடைய சகோதர சகோதரிகளுடன் சேர்த்து வைப்பாரா? இல்லை சித்தியையும் கன்டென்ஸ்டென்ட்டாக பார்த்து சண்டைக் கோழியாக இருப்பாரா என்ற சந்தேகம் எழுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+