சந்திரா காணாம போயிட்டாங்களாமே...ரெண்டு மாசம் கழிச்சுதானா?
Recommended Video
சென்னை: சன் டிவியின் சந்திரகுமாரி சீரியல் அறிவிச்சது போல மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாச்சு. எப்போ ஒளிபரப்புனா என்னங்க... பார்க்கறவங்க பார்த்துதான் ஆகணும்..
சீரியல் சுறுசுறுப்பாத்தான் போகுது.சந்திரகுமாரி சீரியலில் சந்திராவாக ராதிகா நடிக்கறாங்க. இவங்க பொண்ணா பானு நடிச்சு இருக்காங்க. சந்திராவின் கணவர் சந்திராவை விட்டு, விலகி தேவிப்பிரியாவை கல்யாணம் செய்துக்க துடிக்கறார்.
எப்போதும் ராதிகா சீரியல் ரெண்டு பொண்டாட்டி, கொள்ளை, திருட்டு, கொலை, பாசம், பரிகாரம், பூஜை, விரதம்னு இருந்தாலும், பரபரப்பாத்தான் போயிகிட்டு இருக்கும். இதிலும் அதுக்கு பஞ்சமில்லை.
நதியா நதியா நைஸ் நதியா.. சின்னத்திரையில் .. அப்படியே இருக்காரே அழகு 'ரோஜா'வாக!
காணோம்
சீரியலில் திடீர்னு சந்திராவை காணோம்னு மகள் அழறாங்க.. காலையில அப்பாவுடன் இருக்கும் ருத்ராதான் போன் செய்து கூப்பிட்டாங்க மாமா, அப்போ கிளம்பி போனவங்க ராத்திரியாச்சு இன்னும் காணோம்னு சொல்லிட்டு அழறா.
ட்வீட்
ராதிகா தனது ட்வீட்டில் ரெண்டு மாசம் கழிச்சு புதுப் பொலிவோடு வருவேன்னு சொல்லி இருந்தாங்க. அது போல வரத்தான் இப்போ காட்சிகளில் ராதிகா காணாம போயிட்ட மாதிரி எபிசோடு கொண்டு போறாங்களோ என்னவோன்னு பேசிக்க ஆரம்பிச்சு இருக்காங்க.
பிரைம் டைம்
சன் டிவியில மாலை 7:30 மணி என்பது அப்போதெல்லாம் குடும்ப பெண்கள் டிவி பார்க்காத நேரம். அந்த நேரத்தை திருமுருகனின் மெட்டி ஒலி சீரியலுக்கு சன் டிவி ஒதுக்கித் தந்தது. அந்த நேரத்துல மெட்டி ஒலின்னு நல்ல சீரியலை சன் டிவிக்கு கொடுத்து, மக்களுக்கும் ரொம்ப பிடித்துப் போக, சன் டிவியில் அந்த நேரம் பிரைம் டைம் என்றானது.
ராதிகா
இப்போது ராதிகாவுக்கு இது ஒரு சவாலான கால நேரம் என்று கூட சொல்லலாம். மக்களின் கவனத்தை 6:30 மணிக்கு திருப்பி சந்திரகுமாரியைப் பார்க்க வச்சுட்டா அதுவும் சீரியல்களின் பிரைம் டைம் நேரமாகிவிடும்.
செய்வாரா ராதிகா...