இன்ஷியல் நடிகைக்கு CM சான்ஸ்? ராமாவரம் தோட்டத்தில் ஹீரோயின்ஸ் டிஸ்கஷன்.. தப்பித்த தமிழகம்: பிரபலம்
மதுரை: புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மறைந்தபோது, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்த விவாதம், அவருடன் நடித்த நடிகைகளிடையே ஏற்பட்டதாக மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அத்துடன், எந்தெந்த நடிகைகளுக்கு இப்படியான வாய்ப்பு வந்தது? என்பது குறித்தும் விலாவரியாக கூறியிருக்கிறார் பத்திரிகையாளர் பாண்டியன்.
Seithi Malar என்ற சேனலுக்கு சமீபத்தில் பேட்டி ஒன்றை தந்திருந்தார் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன்.. அதில், "எம்ஜிஆர் இறந்துவிட்டார்.. உடனே ஆர்எம் வீரப்பன் , அவசர அவசரமாக எல்லாரிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு, கவர்னரிடம் செல்ல முயன்றார்.

யார் முதலமைச்சர்
தன்னை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்பதற்காக இப்படி திட்டமிட்டார்.. எம்ஜிஆரின் கணக்குப்பிள்ளை என்பதை தாண்டி வேறு ஏதாவது வரலாறு ஆர்.எம். வீரப்பனுக்கு உண்டா? கார்கில் போருக்கு போனாரா? சுதந்திர போராட்ட தியாகியா?
அந்த நேரத்தில் நடிகை கேஆர் விஜயா ஆர்எம் வீரப்பனுக்கு போனை போட்டு, "அக்கா (ஜானகி அம்மாள்) உங்களை ராமாவரம் தோட்டத்துக்கு வர சொல்கிறார்" என்று அழைத்துள்ளார்.. பிறகு லதா, மஞ்சுளா, கேஆர் விஜயா, உள்ளிட்டோர் ஜானகி அம்மாவிடம், ஆர்எம் வீரப்பன் தமிழகத்தின் முதல்வராக வருவதைவிட, நீங்களே முதல்வராக நில்லுங்கள் என்று சொல்லி உள்ளனர்..
கேஆர் விஜயாவுக்கு வந்த வாய்ப்பு
உடனே ஜானகி அம்மாள் அதற்கு மறுத்து, என்னால் முதலமைச்சராக ஆக முடியாது, நீயே முதலமைச்சராகிவிடு என்று கேஆர் விஜயாவை பார்த்து சொன்னார்.. இதைக்கேட்டு பதறிய கேஆர் விஜயா, என்னால் முதலமைச்சராக இருக்க முடியாது என்றார்.. பிறகு மஞ்சுளாவிடம் "நீயே முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்" என்று சொல்லவும் மஞ்சுளாவும் அந்த வாய்ப்பை தவிர்த்து லதாவிடம் அந்த வாய்ப்பை ஏற்குமாறு சொல்கிறார்.
இப்படியே தோட்டத்தில் ஒருவருக்கொருவர் விவாதம் நடந்து, கடைசியில் "அக்கா நீங்களே முதல்வராக நில்லுங்கள்" அனைத்து நடிகைகளும் சேர்ந்து ஜானகியம்மாளிடம் சொன்னார்கள். அத்துடன் ஆர்எம் வீரப்பனை அழைத்து, "அக்காதான் முதலமைச்சர்" என்று அறிவித்தனர்.. இப்படி மயிரிழையில் அன்று தப்பியது தமிழ்நாடு.. கடைசியில் ஜானகி அம்மாள், ஜெயலலிதாவை முதல்வராக ஏற்றார்..
ஜீவா, காமராஜர், கக்கன்
ஆனால், கக்கன், ஜீவா, காமராஜர், பெரியார் இவர்கள் இல்லாத ஜெயிலே கிடையாது.. அடக்க முடியாத கைதிகளை கர்நாடகாவில் குல்பர்கா சிறையில் தான் அப்போது அடைப்பார்கள். காரணம், அங்குள்ள சுவர்கள் சுண்ணாம்பு கல்லினால் கட்டப்பட்டிருக்கும்.. அங்குதான் பெரியாரை அடைத்தார்கள்.. உம்பெல்லாம் அவருக்கு புண் வந்துவிட்டது.. உங்கள் நண்பரை கர்நாடக சிறையில் அடைத்துள்ளீர்களே? என்று ராஜாஜியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அவர் அங்கு குளுகுளுன்னு இருக்கட்டுமே என்றுதான் அந்த சிறையில் வைத்திருக்கிறேன்" என்றாராம் ராஜாஜி.. இப்படி சமரசமே செய்து கொள்ளாத பல தலைவர்கள் கட்சி தலைவர்கள் அன்று இருந்துள்ளனர்" என்றார் பாண்டியன்.
மீண்டும் கே ஆர் விஜயா சான்ஸ்
அதேபோல, Globe 360 என்ற யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் அளித்திருந்த பேட்டியிலும், கேஆர் விஜயாவுக்கு வந்த முதலமைச்சர் சான்ஸ்" குறித்து கூறியிருந்தார்..
அதில், "எம்ஜிஆர் மரணமடைந்தபோது, ராமாவரம் தோட்டத்தில் அவருடன் நடித்த கதாநாயகிகள் அனைவரும் ஒன்றுகூடினார்கள்.. கேஆர் விஜயா, மஞ்சுளா, லதா, எல்லாரும் ஜானகி அம்மாவுடன் ஒன்று திரண்டார்கள்.. அப்போது யார் அடுத்த முதலமைச்சர் என்ற போட்டி எழுந்தது.. ஜெயலலிதா ஜானகியை எதிர்த்ததால், எம்ஜிஆருடன் அதிக படம் நடித்தவர் என்ற முறையில் அடுத்த ஆப்ஷனாக கேஆர் விஜயாவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கலாமா? என்ற பேச்சு எழுந்தது.
ஆனால், தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் கேஆர் விஜயா. முதலமைச்சராக பதவியேற்றால், அது தனக்கு பலவிதமான விமர்சனங்களை தந்துவிடும்.. தன்னை பற்றி கிசுகிசுக்கள் எழுதுவார்கள் என்றெல்லாம் சொல்லி, முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று கேஆர் விஜயா மறுத்து விட்டார்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications