பிரியங்கா சீஃப் கெஸ்ட் பாவனி மாங்கல்யத்தை தொட்டு.. அதுவிடுங்க, சிதறிய சித்தார்த் வார்த்தை: பிரபலம்
சென்னை: "நன்றியின்மையை வெளிப்படுத்த , நாய் என்று அவ்வளவு பெரிய கடுமையான வார்த்தையை அஷ்ரப் பயன்படுத்தியிருக்க தேவையில்லை.. ஏனென்றால் மனசு என்பதே மாறக்கூடியதுதானே? எந்தவொரு உறவுகளிலும் கடும் சொற்களை பார்த்து மீண்டும் எதிர்தரப்பில் வார்த்தை வைட்டால் என்னாவது? பிடிக்கவில்லையானால் ஒதுக்கிவிடலாம்" என்று அமீர் - பாவனி திருமணம் குறித்து பேசும்போது, மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "2வது திருமணம் என்பது மிகப்பெரிய தவறொன்றும் கிடையாது.. கணவனை இழந்த பெண்ணுக்கு மறுமணம் என்பது அவசியமானது.. வாழ்க்கைத்துணை கட்டாயம் தேவை.. இதையெல்லாம் விமர்சனமே செய்யக்கூடாது.. அப்படி யாராவது இதை எதிர்த்தால், அது கண்டிக்க வேண்டிய விஷயம்.

திருமண அழைப்பிதழ்
அதேபோல, தன்னை வளர்த்தவர்களுக்கு அமீர் திருமணத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை என்கிறார்கள்.. பொதுவாக, எல்லா பெற்றோர்களும், வளர்த்தவர்களுக்கும், நம்முடைய பிள்ளைக்கு நாம்தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.. மேலும், காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெரும்பாலான பெற்றோர்களுக்கும், வளர்த்தவர்களுக்கும் இருப்பதில்லை.இதற்கு காரணம், தாம் தேடித்தரும் வாழ்க்கை மட்டுமே பிள்ளைகளுக்கு சரியாக இருக்கும் என்று நம்புகிறார்கள். இது தவறு கிடையாது.. இவ்வளவு காலம் பிள்ளை வளர்த்து ஆளாக்கியவர்களின் உரிமையும்கூட.
சமூக மதிப்பு மரியாதை
காதலிக்கலாம், தவறில்லை.. ஆனால் பெற்றோர் அலலது வளர்த்தவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடப்பது சிறப்பு. அப்போதுதான் திருமணம் செய்யும் தம்பதிக்கு, சமூகத்தில் பாதுகாப்பும், மரியாதையும் கிடைக்கும்.. தம்பதிக்குள் சிறு சண்டை வந்தாலும், பெரியவர்கள் இருககும்போது, இதில் தலையிட்டு, சமரசம் செய்ய வாய்ப்புண்டு. இப்படி வளர்த்தவர்கள், பெற்றவர்கள் இல்லாத சூழலில், எத்தனையோ இளம்தம்பதியினர் கோர்ட் படியேறுவதை காண முடிகிறது. அதேபோல, அமீரை வளர்த்த அஷ்ரப், "நாய் ஒன்று மழையில் நனைந்து கொண்டிருந்தால், அதை காப்பாற்றி வீட்டில் வைத்து பேணி காத்து வளர்க்கலாம். இதுவே அதே ஒரு இடத்தில் ஒரு மனிதர் இருந்தால் அப்படியே கண்டு கொள்ளாமல் நகர்ந்து சென்றுவிடுங்கள். அவருக்கு உதவ வேண்டும் என்ற ஆசையில் வீட்டிற்கு மட்டும் அழைத்து வந்து பாதுகாத்து வளர்க்க வேண்டாம். அப்படி வளர்த்தால் என்ன நடக்கும் என்பற்கு நான் தான் சிறந்த உதாரணம் என கூறியுள்ளார்.
சித்தார்த் பதிவு
நன்றியின்மையை வெளிப்படுத்த அவ்வளவு பெரிய கடுமையான வார்த்தையை அஷ்ரப் பயன்படுத்தியிருக்க தேவையில்லை.. ஏனென்றால் மனசு என்பதே மாறக்கூடியதுதானே? எந்தவொரு உறவுகளிலும் கடும் சொற்களை பார்த்து மீண்டும் எதிர்தரப்பில் வார்த்தை வைட்டால் என்னாவது? பிடிக்கவில்லையானால் ஒதுக்கிவிடுங்கள்.
நடிகை சமந்தா, நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்று மனவேதனையில் இருந்தார்.. அப்போது, "நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டை நாய்க்கு கிடைக்கும் என்று எழுதி இருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது" என்று சித்தார்த் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தது பெரும் சலசலப்பை பண்ணியது. எப்போதுமே யாருமே, ஒருவரின் தலைவிதியை அப்படி சொல்லக்கூடாது.. அதிலும் காயப்படுத்தி பேசக்கூடாது. நாளைக்கே அவர்கள் மனம் வருந்தி, திரும்பி வரக்கூடும்..
பிரியங்கா சீஃப் கெஸ்ட்
அமீர் -பாவனி திருமணத்துக்கு பிரியங்கா தாலி எடுத்து தர வேண்டும், ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்பதை பாவனி-அமீர் விரும்புகிறார்கள்.. காரணம், இந்த தம்பதி மதிக்கக்கூடிய நபராக பிரியங்கா இருககிறார், தங்களை பிரியங்கா ஆசீர்வதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.. இது ஒன்றும் தவறு கிடையாது.. அவரவர் மன விருப்பத்தை பொறுத்தது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications