For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவன் 10 சொல்ல.. இவ 9 சொல்ல.. இருவருக்கும் இடையே 0 இடைவெளி!

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் சின்னத்தம்பி சீரியலில் நந்தினியும், சின்னத்தம்பியும் விரும்பியும் விரும்பாமல் திருமணம் செய்துகிட்டும் நிம்மதியாக வாழ முடியாதபடி பல தடைகள்.

சண்டை, வாக்குவாதம், வெறுப்பு...பிரிவு என்று பல்வேறு போராட்டங்கள். ஒரு வழியாக இருவரும் சமாதானமாகி ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் கணவன், மனைவியாக சேர்ந்து வாழவில்லை.

இந்த உண்மை இருவரின் பெற்றோருக்கும் தெரிஞ்சு, மீண்டும் ஊர் கூடி திருமணம் செய்து சாந்தி முகூர்த்தத்துக்கும் ஏற்பாடு பண்றாங்க. யார் தொந்தரவும் இருக்க கூடாதுன்னு நண்பன் வீட்டில் இந்த ஏற்பாடுகள் நடக்குது.

ஸ்ரீ ராமனுக்கு பாயசம் ஊட்டி ஆனந்த கண்ணீர் விடும் சிறுவன் அனுமன்.. ஆஹா... மெச்சும் பக்தி ஸ்ரீ ராமனுக்கு பாயசம் ஊட்டி ஆனந்த கண்ணீர் விடும் சிறுவன் அனுமன்.. ஆஹா... மெச்சும் பக்தி

நல்ல நேரம்

நல்ல நேரம்

2 மணிக்குத்தான் நல்ல நேரம்னு சொல்லி இருவரும் ஓகே கண்மணி ரொமான்ஸ் படம் பார்த்துகிட்டு இருக்காங்க. ரெண்டு மணிக்கு ஒரு நிமிஷம்தான் இருக்கு.. இனிமேல் என்னால பொறுக்க முடியாதுங்கன்னு நந்தினி சொல்றா. ஒரு நிமிஷம் 60 நொடிதான் நந்தினி போயிரும்னு சொல்றான் சின்னத்தம்பி.

எனக்கு 60 யுகம்.

எனக்கு 60 யுகம்.

60 நொடி எனக்கு ஒரு 60 யுகம் மாதிரி இருக்குன்னு சொல்றா.. 10 நிமிஷம்தான்னு சொல்லிட்டு இப்போ 9 என்கிறான், அவ 8 ன்னு சொல்ல, இவன் 7 ன்னு சொல்ல அவ 6 ன்னு சொல்ல, இவன் 5 ன்னு சொல்ல, அவ 4 ன்னு சொல்ல, இவன் 3 ன்னு சொல்ல, அவ 2 ன்னு சொல்ல இவன் 1ன்னு சொல்ல. இப்போது 0 வில் இருவருக்கும் காற்றுக்கும் இடமில்லா 0 இடைவெளி..

கதவு

கதவு

அப்போது கதவைத் தட்டும் சத்தம் .. முதலில் கூர்க்கா கதவைத் தட்டி காசு கேட்கிறான். மறுபடி இன்னொருவன் கதவைத் தட்டி டிஸ்டர்ப் செய்கிறான். அவள் பதில் சொல்லிட்டு வர்றதுக்குள்ள சின்னத்தம்பி தூங்கிடறான்.

ஆசையா காத்திருக்கேன்..

ஆசையா காத்திருக்கேன்..

தூக்கமா.. ஆசையா காத்திருக்கேன்னு சொல்லிட்டு தலையணையை எடுத்து அவனை அடிச்சு எழுப்பறா. சும்மா விளையாட்டுக்கு நடிச்சேன்.. நந்தினி... நான் தூங்குவேனான்னு சொல்லிட்டு, கசமுசாவில் கலக்கறாங்க.

பார்க்க வெட்கம்

பார்க்க வெட்கம்

நந்தினி குளிச்சுட்டு இவனை வந்து எழுப்பறா.. எழுந்து ஃபிரஷாகுங்க.... நான் காபி கொண்டு வரேன்னு சொல்றா. அவன் முகத்தைப் பார்க்காமல் குனிந்து பேசறா. ஏன் என்னை பார்த்து பேச மாட்டியான்னு கேட்கறான்...முகத்தை பார்க்க வெட்கமா இருக்குங்கன்னு சொல்றா நந்தினி.

முதல் பகல்

முதல் பகல்

அப்போ.. உங்க முகத்துல குங்குமம் நிறைய ஒட்டி இருக்குங்கன்னு சொல்லிட்டு, போய் குளிங்கன்னு சொல்லி எழுந்து போறா.. அவன் அவளை முந்தானையை இழுத்து பிடிச்சு, அருகில் உட்கார வைக்கறான். முதல் இரவு பார்த்தாச்சு.. முதல் பகல் பார்க்க வேணாமான்னு கேட்கறான்.ம்ம்ம்னு நந்தினி சொல்ல, முதல் பகலும்...

முதல் பகல்

பிரிச்சு மேஞ்சாறு

பிரிச்சு மேஞ்சாறு

ரெண்டு பேரும் வீட்டுக்கு வெட்கப்பட்டுகிட்டே வர, அனைவரும் வேடிக்கை பார்க்கறாங்க. நந்தினியின் அத்தை இருவரையும் பார்த்து, சின்னத்தம்பியின் கன்னத்தில் லிப்ஸ்டிக் இருக்கறதை பார்த்ததும்.. ஆஹா நல்லபடியா முடிஞ்சுச்சுருச்சு போல இருக்கேன்னு வயித்தெரிச்சலில் நிக்க, என்ன பார்க்கறீங்கன்னு கேட்கறா நந்தினி.ஒண்ணும் இல்லையேன்னு சொல்றாங்க அத்தை. சும்மா பிரிச்சு மேஞ்சுட்டாருன்னு நந்தினி உடலை முறுக்கிவிட்டு உள்ளே போறா.

English summary
Fight, argument, hate ... Various struggles of the division. Even though both are peaceful and live in the same house, the husband does not live together as a wif
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X