CWCஇல் செஃப் வெங்கடேஷ் பட் சொன்ன வார்த்தை.. கதறி அழுத புகழ்.. கண்கலங்கிய போட்டியாளர்கள்
சென்னை: குக் வித் கோமாளி இந்த வார நிகழ்ச்சியில் புகழ் செஃப் வெங்கடேஷ் பட் சொன்ன வார்த்தைக்காக கதறி அழுகிறார்.
இந்த வாரம் புகழ் தெருக்கூத்து கலைஞர்களின் வேடம் அணிந்து இந்த நிகழ்ச்சியில் பலரையும் கண்கலங்க வைத்திருக்கின்றார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் சீசன் 4 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கலந்துகொண்ட பல பிரபலங்கள் அடுத்து வெள்ளித்திரையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர் தான் புகழ்.
புகழ் ஆரம்பத்தில் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும் அவருக்கு தகுதியான பெயரும் புகழும் கிடைக்காமல் இருந்து வந்தது. கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் அவர் பெண் வேடமிட்டு பலரையும் மகிழ்வித்து இருக்கிறார். ஆனால் அது அவர்தான் புகழ் என்று யாருக்கும் தெரியாது அந்த அளவில்தான் புகழுடைய வளர்ச்சி இருந்தது.
வாய்ப்புக்காக பல இடங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருந்த புகழ் விஜய் டிவியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது கார் செட்டில் வேலை பார்த்து அங்கேயே தங்கி கூட பல நாட்கள் ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கிறார் அப்படி கஷ்டப்பட்டதால் தான் தற்போது அவர் வெள்ளி திரையில் ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் புகழுக்கு ஒரு திருப்பு முனையாக தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய முகத்தை மொத்த உலகத்திற்குமே காட்டி புகழ் ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட்டார். இவருடைய காமெடி மற்றும் ஜாலியான பேச்சு பலரையும் கவர்ந்திருந்தது. இவர் அடிக்கடி வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு இருவரிடமும் அடிவாங்கிக் கொண்டிருந்தாலும் அதுவே ஜாலியாக எடுத்துக் கொள்வார். அதையே கூட பல நெட்டிசன்கள் கலாய்த்தூள் கொண்டிருக்கின்றனர்
அந்த வகையில் பல நேரங்களில் தன்னுடைய உடலை வருத்தி வேஷம் போட்டு பலரையும் மனம் நெருட வைத்திருக்கிறார். அந்த மாதிரி தான் இந்த வாரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு தெருக்கூத்து கலைஞராக புகழ் வேடம் அணிந்து வந்திருக்கிறார். அப்போது அவரிடம் நீ சமுதாயத்திற்கு சொல்லும் ஒரு கருத்தாக ஏதாவது செய்ய வேண்டும் என்று வெங்கடேஷ் பட் கூறி இருக்கிறார்.

ஒரு தெருக்கூத்து கலைஞர் தெருவில் ஆடி பலரையும் சிரிக்க வைத்து விட்டு வீட்டிற்கு வரும்போது அவருடைய மனைவி யை ஒருவர் கொலை செய்துவிட்டார். அதை பார்த்த தெருக்கூத்து கலைஞர் எப்படி கதறி அழுவார் என்று அவருக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதை தத்துரூபமாக நடித்துக் காட்டி, பார்த்துக் கொண்டிருக்கும் சக போட்டியாளர்களையும் புகழ் கண் கலங்க வைத்து விட்டார். தற்போது வீடியோஸ் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications