CWC-யில் அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்.. கண்கலங்கி கடைசியில் சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். யார் அவர் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனாலும் இந்த சேனலில் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விடுவது வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டது. இதில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதிலும் அதிகமானோர் சின்னத்திரை பிரபலங்களாகவே இருக்கின்றனர். ரசிகர்களுக்கு நன்கு பிரபலமான பல போட்டியாளர்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமடைந்த வசந்த் வசி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்றதுமே பாண்டியன் ஸ்டோர் ரசிகர்கள் இவருக்கு அதிகமான ஆதரவு கொடுத்து வந்தனர்.
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் தொடங்கப்பட்ட பிறகு இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்திருக்கின்றனர். இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் எலிமினேஷன் ரவுண்ட் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதோடு இந்த வாரத்தில் பிரியாணி
செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனால் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக ரசிகர்களும் ஆர்வத்தோடு இருந்தனர்.

ஏற்கனவே கடந்த வாரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியாணி டாஸ்க்கில் சரியாக சமைக்காத அக்ஷய் கமல், பூஜா மற்றும் வசந்த் வசி ஆகியோர் எலிமினேஷன் போட்டிக்கு தேர்வாகி இருந்தனர். அதில் வசந்த் வசி சரியாக சமைக்கவில்லை என்று செஃப் தாமு அவரை எலிமினேட் செய்திருந்தார். அப்போது அவர் கண்கலங்க சில வார்த்தைகளை பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவிற்கு பல ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
அதில் வசந்த் வசி பேசுகையில் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று பல சீசன்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்த நிகழ்ச்சி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். எனக்கு கொஞ்சம் சமைக்க தெரியும். அதனால் இந்த நிகழ்ச்சியில் நான் நன்றாக பெர்ஃபார்மன்ஸ் செய்வேன் என்று நினைத்தேன் ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் எனக்காக பலர் ஹார்ட் வொர்க் செய்து இருக்கிறார்கள்.
என்னோடு கோமாளியாக இருந்தவர்கள் என்னை வெற்றியடைய வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்கள், இந்த நிகழ்ச்சிக்கு வந்து எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்து இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது வசந்த் வசி கண்கலங்கி அழுதுவிட்டார். அப்போது புகழ் உட்பட கோமாளிகள் எல்லோரும் இதற்கெல்லாம் கவலைப்படாத இனி வைல்ட் கார்ட் சீக்கிரமா வரப்போகுது அதில் வந்துரு என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications