நல்லாதானே போய்கிட்டு இருக்கு? அவசர அவசரமாக முடிவுக்கு வரும் குக் வித் கோமாளி சீசன் 5?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பெருவாரியான ஆதரவை பெற்றுள்ள குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி அவசர அவசரமாக முடிக்கப்பட்டு வருகிறது. வாரத்திற்கு ஒருவர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் இருவர் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. 4 சீசன்களில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக தாமுவுடன் வெங்கடேஷ் பட் இருந்த வந்தார். ஆனால் 5ஆவது சீசனில் வெங்கடேஷ் பட் நடுவராக பங்கேற்கவில்லை.

television entertainment

இது குறித்து ஆரம்பத்தில் சலசலப்புகள் இருந்தன. அதாவது விஜய் டிவிக்கும் பட்டுக்கும் ஏதோ பிரச்சினை என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் வெங்கடேஷ் பட்டே , ஏன் விஜய் டிவியில் இருந்து விலகினார் என்பதற்கான காரணத்தை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் கூறியிருந்ததாவது: என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த நிறுவனமான என்டமால், விஜய் டிவியை விட்டு வெளியேறிவிட்டது. அதனால் நானும் வெளியேறிவிட்டேன். மற்றபடி விஜய் டிவியுடன் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் வெங்கடேஷ் பட்டுக்கு பதில் யார் நடுவர் என்ற அடுத்த கேள்வி எழுந்தது.

அந்த வகையில் பட்டுக்கு பதில் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவரானார். இந்த நிகழ்ச்சியில் 10 பேர் கலந்து கொண்டனர். ஷாலின், அக்ஷய், திவ்யா துரைசாமி, ஸ்ரீகாந்த் தேவா, பூஜா வெங்கட், வசந்த் வாசி, இர்ஃபான், விடிவி கணேஷ், பிரியங்கா தேஷ்பாண்டே, சுஜிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா, சுஜிதா, இர்பான், அக்ஷய் கமல் ஆகிய 4 பேர் அடுத்த வாரம் நடைபெறும் செமி பைனலுக்கு போட்டியிடுகிறார்கள். கடந்த வாரம் திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ் ஆகிய இருவர் எலிமினிடேட் செய்யப்பட்டார்கள். வாரந்தோறும் ஒரு எலிமினேஷன் என சொல்லப்பட்ட நிலையில் ஒரே வாரத்தில் ஏன் இருவர் என்ற கேள்வி எழுந்தது.

television entertainment

இதற்காக விரைவில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்க போகிறதாம். இதனால்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விரைந்து முடிக்க அவசரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த நிலையில் 8ஆவது சீசனில் இருந்து கமல்ஹாசன் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதையடுத்து இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க போவதாக விஜய் டிவி அறிவித்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் விஜய் சேதுபதி, "இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு" என கூறுகிறார்.

இந்த நிகழ்ச்சி அக்டோபர் 13 ஆம் தேதி தொடங்க போவதாக தெரிகிறது. இந்த சீசனில் முந்தைய சீசன் போட்டியாளர்கள் 2 அல்லது 3 பேர் வரை களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுடன் தான் புதுப்போட்டியாளர்கள் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+