என்னாது ஹேன்ட்சம் பாயா.. எங்க கன்னத்தைக் காட்டுங்க பார்ப்போம்.. !
சென்னை: விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் ஒரு வழியா இப்போதான் மறுபடி ஃபார்ம்க்கு வந்துருக்கு. குடும்பமே வீட்டை அடகு வச்சுட்டு, கஷ்டப்பட்டு பணத்தை சேர்த்தாங்க, வீட்டை மீட்டாங்க..
பிசினெஸ் நொடிச்சு போக, பசங்களோட ,அப்பா வேலைக்கு ஏற்பாடு செய்யறார். ஒருத்தர் செஃப், இன்னொருத்தர் கிளார்க், கடைசியா நம்ம சின்னையாவுக்கு பெண்கள் படிக்கும் கல்லூரியில் கெஸ்ட் லெக்சர் வேலை.
ராஜா ராணி சீரியல் ஆரம்பத்துலேர்ந்தே இந்த சம்பா சின்னையா காதல் லொள்ளு சாரி கொஞ்சம் ஓவர்ன்ற மாதிரிதான் இருக்கும்.இப்போ மறுபடியும் ஆரம்பிச்சு இருக்காங்க.
அனாமிகாவுக்கு நவீன் குடுத்த புடவை .. அது எப்படி அனிதாகிட்ட போச்சு?
என்ன கவலை
சின்னையா என்ன கவலையா இருக்கீங்க... பெரிய அய்யாதான் எல்லாருக்கும் வேலை வாங்கி கொடுத்துட்டாங்க.. உங்களுக்கும் வேலை கிடைச்சுருச்சு. நமக்கு கஷ்டம் எல்லாம் தீர்ந்து போகும் சின்னையான்னு சொல்றா சம்பா
சம்பா
உன்னை நினைச்சுதான் கவலையா இருக்கேன் சம்பா.. நான் வேலைக்கு போயிட்டா உன் நிலைமை என்னாகுமோன்னு சொல்றான் சின்னையா. நீங்க வேலைக்கு போனா எனக்கு நல்லதுதானே சின்னையான்னு கேட்கறா.
காலேஜ்ல
எனக்கு எங்க தெரியுமா வேலை.. அழகழகான பொண்ணுங்க படிக்கற காலேஜ்ல வேலை.. நான் வேற ஹேன்சம் ஆச்சா.. கேர்ள்ஸ் சைட் அடிப்பாங்க.. உன்னால தாங்கிக்க முடியாதுன்னு சொல்றான்.
வரேன்
அப்படியா சின்னையா.. இருங்க வரேன்னு சொல்லிட்டு அயர்ன் பாக்ஸை எடுத்துட்டு வர்றா. கன்னத்துல சூடு வைக்க போக, இருவரும் மல்லுக்கட்டி சிரிக்கறாங்க. இல்லை சின்னையா இதால உங்க கன்னத்துல தேய்ச்சுட்டா பொண்ணுங்க பார்க்க மாட்டாங்க இல்லே அதுக்குதான் சின்னய்யான்னு சம்பா சிரிக்கறா.
சும்மா
நிஜமா நான் சும்மா சொன்னேன்டி... ஸ்டூடென்ட்ஸை எப்படி நடத்தணும், மதிக்கணும்னு எனக்கு தெரியாதான்னு சொல்றான். இல்ல சின்னய்யா பொண்ணுங்க படிக்கற இடத்துல கூட பாதுகாப்பு இல்லை.. உங்களை மாதிரி ஆளுங்க அதை மாத்தணும் சின்னையான்னு சம்பா ஒரு மெசேஜ் சொல்றா. குட்!