Naam Iruvar Namakku Iruvar: நீ உள்ளே போயிட்டேன்னா நா என்னடா பண்றது?
சென்னை: நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தேவி மாயனிடம் காதலால் கசிந்துருகி பேசுகிறாள்.
ஏதாவது ஒன்னுக்கிடக்க ஒன்னு நடந்து நீ உள்ளே போயிட்டா அப்புறம் நான் என்னடா பண்றது என்று.
மாயன் சொல்ல வருகிறான்... ஏங்க என்று சோலா வருவதற்குள் தேவி இடை மறித்து உங்களுக்குத்தான்.. சான்டில் பாண்டி இருக்காரு உங்க மாமா இருக்காரு.. உங்கம்மா இருக்காங்க அப்படி இப்படின்னு சொல்லாதேன்னு காதலால் கசிந்து உருகறா
என் கூட நீ
மாயன் தன் தங்கச்சி கல்யாணத்துல மாப்பிள்ளை தன் அப்பாவை தப்பா பேசியதில் கலாட்டா புண்ணியதில் மண்டபத்தையே களேபரம் ஆக்கிட்டான். அது பத்திதான் மாயனின் பொண்டாட்டி மாயனிடம் இப்போது பேசிக்கிட்டு இருக்கா. நீ என் கூட இல்லாட்டி நான் இல்லேன்னு சொல்றா.
ராசாத்தி தங்கம்
நியாயமான விஷயத்துக்காக உன் கோபம் எனக்கு பிடிச்சு இருந்துச்சு. ஆனா, இத்தோட நிறுத்திக்க. இனிமே இது போல நீ கோபப்பட்டு எதாவது நடந்து உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் இல்லே. அதனால் முரட்டுத் தன்மை இனிமே நடந்துக்காதேன்னு தேவி சொல்றா.
கண்ணு தங்கம்
கண்ணு தங்கம் ராசாத்தி உன்னை கண்டாலே நெஞ்சு முச்சூடும் தீவாளி.. சொன்னா நம்பு மவராசி..உன் பேர சொல்லாட்டி மழை ஊருக்கு பேயாது.. என்று பாடல் ஒலிக்கிறது.
இருவரும் தம்பதியர்
இத்தனைக்கும் இன்னமும் இருவரும் தம்பதியர் ஆகலை. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஹை லைட்டே அரவிந்த், மாயன் என்கிற இரட்டை வேடத்தில் நடிக்கும் ஆர்.ஜெ. செந்தில் இன்னும் தேவி, தாமரை என்கிற தனது இரு ஜோடியுடன் இணையாமல் கதையை நகர்த்திக் கொண்டு இருப்பது என்பதுதான்.