இப்படி உட்கார்ந்து .. அப்படி சரிந்து.. வியர்க்க வைத்த தர்ஷா குப்தா!
சென்னை: தர்ஷா குப்தா வா இது என்று சூம் பண்ணாமலே ரசிகர்களின் கண்களை வியர்க்க வைத்துள்ளார்.
ரசிகர்கள்தான் குறும்புக்காரர்களாச்சே.. அவர்கள் பார்வை எங்கு போனது என்பதை அவர்களது கமெண்ட்டே காட்டி கலகலக்க வைத்துள்ளது.
தூக்கி கட்டிய கொண்டையோடு... பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவில் கலக்கும் அண்ணி!
அந்த இரண்டும் தான் கலக்கலாக இருக்கிறது என்று கூறி... அவரது காதில் தொங்கிய கம்மலை சொல்லி கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.
வாக்கு மாறிப் போச்சு
இனி யாருக்காகவும் அந்த மாதிரி நான் பண்ண மாட்டேன் என சொன்ன வாக்கு மாறி தற்போது லேட்டஸ்டாக கலக்கலான உடையில் இரண்டு கம்மலையும் ஆட்டோ ஆட்டு என ஆட்டி சேலையில் புது அவதாரம் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் வைரலாக பரவி வருகிறது. தற்போது இரண்டு தினங்களாக இன்ஸ்டாகிராமில் தர்ஷா குப்தா கண்ணீருடன் பரவி வந்தது .
இனி கிடையாது
அந்த வீடியோவில் நான் இனி யாருக்காகவும் எந்த பொருளுக்கும் பிரமோஷன் போட மாட்டேன் என கூறியிருந்தார் .ஆனால் தற்போது இவர் கலக்கலாக சேலையில் அதுவும் மாடலாக கட்டிக்கொண்டு ஜிமிக்கிகம்மல் போட்டு கை நிறைய வளையலேடு தேவதை போல போட்டோ ஷூட் நடத்தி அதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு இருக்கிறார்.
வாக்கை மீறிட்டீங்களே
இதனை சற்றும் எதிர்பார்க்காத அவருடைய ரசிகர்கள் மீண்டும் என்ன அந்த மாதிரி களமிறங்கி விட்டீர்களா என கேள்வி கேட்டு வருகிறார்கள் .அதுவுமில்லாமல் என்ன சொன்ன வாக்கு மீறி விட்டீர்கள் இப்ப தானே சொன்னீங்க இனி யாருக்காகவும் புரமோஷன் போஸ்ட் போட மாட்டேன் என இப்படி மாத்தி மாத்தி பேசலாமா என கேள்வி கேட்டு வருகின்றனர்.
நான் ரொம்ப பிசி
ஏற்கனவே தான் ரொம்ப பிசியாக இருக்கிறேன் என இவர் கூறியிருப்பதால் இந்த போஸ்ட் கூட இவர் ஏற்கனவே எடுத்து வைத்த போட்டோஸ்கள் தான் என இவருடைய ரசிகர்கள் கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு பதில்களை போட்டிருக்கின்றனர் .ஆனால் இன்னமும் யாருக்கும் தர்ஷா குப்தா பதில் கூறவில்லை .எப்போது பதில் கூறுவார் என அவருடைய ரசிகர்களும் காத்திருக்கின்றனர் .
படிக்க நேரமில்லை
ஆனால் அவருக்கு நேரமே கிடைக்கவில்லை அதனால் தான் கமெண்டுகளை என்னால் படிக்க முடியவில்லை என ஏற்கனவே அவர் கூறியிருந்தார் அதனால்தான் இதற்கு முன்பு பேசிய மீம்ஸ்களைக் கூட இவரிடம் பவித்ரா சொன்னதால்தான் இவர் அதற்கு விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிடு இருந்தாராம் .ஆனாலும் தற்போது இவரை வைத்து மீண்டும் மீம்ஸ்கள் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள் இது எப்போது பதில் சொல்வார் என இவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மிதக்கும் தேவதை
ஆனாலும் தற்போது இவர் லேட்டஸ்டாக வெளியிட்டிருக்கும் போட்டோவில் மூன்று வண்ண உடையில் வெள்ளித்திரை நடிகைகளை மிஞ்சும் அழகில் தேவதை போல வலம் வந்து கொண்டு இருக்கிறார். கழுத்தில் எந்த ஜூவல்ஸ் போடாவிட்டாலும் அவர் நெஞ்சில் போட்டிருக்கும் டாட்டூவை நன்றாக தெரியும் அளவிற்கு மாராப்பை இழுத்துவிட்டு பல பேர் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார் .
சொக்கிப் போன ரசிகர்கள்
அதிலும் சிலர் இதுவரைக்கும் ரம்பாவுக்கு தான் அந்த இடம் அழகு என நினைத்திருந்த ரசிகர்கள் தற்போது தர்ஷாவின் புது தரிசனத்தை பார்த்ததும் சொக்கி போய் ரம்பாவின் அழகையே ஓரங்கட்டி விட்டீங்க என்ன கொஞ்சி வருகின்றனர். என்ன சொல்லுங்க தர்ஷா எது செய்தாலும் ரசிக்க ஒரு பெரும் படையே காத்திருக்கிறது.. கண்களில் எண்ணெய் ஊற்றி வைத்துக் கொண்டு.