கறுப்பு மச்சம் கண்ணைப் பறிக்க.. கிறங்கடித்த தர்ஷா குப்தா!
சென்னை: போட்டோ வெளியிட்டு போர் அடித்து விட்டது என ரீல்ஸ் வீடியோவில் காலை வேளையில் உதட்டை நெளித்து வளைத்து கலக்கலாக பெண்களின் ஏக்கங்களை பற்றி கூறியுள்ளார் தர்ஷா குப்தா.
இன்ஸ்டாகிராமை திறந்ததுமே கலக்கலாக வலம் வந்து கொண்டிருக்கும் தர்ஷா குப்தா விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஏக்கத்தை தூண்டி விட்டு போரடித்துவிட்டது என தற்போது வீடியோக்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார் .
டவ்-தெ புயல்.. 23 வருடத்திற்கு பின் 150 கிமீ+ வேகத்தில் காற்று.. குஜராத்திற்கு வெதர்மேன் எச்சரிக்கை!
இவர் முதன்முதலாக ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியல் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் அவர் பாப்புலரானது என்னவோ டிக்டாக் இன்ஸ்டாகிராமில் தான்.
ரசிகர்கள் கூட்டம்
இவருக்கு சீரியல்களை தாண்டியும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அதனால் தான் இவருடைய ஒரு ஒவ்வொரு போஸ்டு வைரலாக பரவி வரும். இவர் அறிமுகமான முதல் சீரியலில் கிராமத்து தேவதையாக வலம் வந்தது போல தான் தற்போதும் அடிக்கடி கிராமத்து உடையில் அதுவும் பாவாடை தாவணியும் புடவையில் கலக்கலாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார் .
தினசரி போஸ்ட்
இவருடைய பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அமைப்பை பார்த்து பலரும் இவருக்கு ரசிகர்களாக மாறிவிட்டனர் .ஆனாலும் இந்த ரசிகர்களின் பட்டாளம் எனக்கு காணாது என தினமும் போஸ்ட் போட்டு ரசிகர்களை பெருக்கி வருகிறார் .தற்போது இவர் நடித்து வரும் சீரியல்களில் அதுவும் செந்தூரப்பூவே சீரியலில் வில்லத்தனத்தால் மிரட்டிக் கொண்டிருக்கிறார் .
மனசு குழந்தை மாதிரி
ஆனால் உண்மையில் குழந்தை மனது போல இருக்கும் இவருக்கும் அதிகமான நெகட்டிவ் கமெண்ட்கள் வந்து கொண்டிருக்கிறது .ஆனால் அதையெல்லாம் தாண்டி தன்னுடைய ரசிகர்களின் கருத்துக்களுக்கு மட்டும் தான் மதிப்பு அளித்து வருகிறார். சீரியலில் நடிகையாகவும், வெப் சீரியல்களிலும் ,ஷார்ட் பிலிம் களிலும் ,மாடலாகவும் பிஸியாக இருக்கும் இவர் தற்போது டிக் டாக் குளோஸ் பண்ணினதும் ரீல்ஸ் வீடியோவை எடுக்க ஆரம்பித்துவிட்டார் .
செம பிசி
பிஸியாக இருக்கும் இவர் கிடைக்கும் சிறிது நேரத்தை கூட விட்டுவிடாமல் வீடியோக்களில் தன்னுடைய திறமைகளை விதவிதமாக காட்டி வருகிறார். இவருடைய லேட்டஸ்ட் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் கண்ணாலேயே சீரியலில் வில்லத்தனத்தை காட்டிக் கொண்டிருக்கும் இவரா காதல் மழைகளையும் பொழிய வைக்கிறார் என புலம்பி வருகின்றனர் .
கவிதை மழை
அதுவும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் இருப்பதால் இவருடைய போஸ்ட் பார்த்ததும் கவிதைகளை பொழிய மறப்பதில்லை ஒவ்வொரு போஸ்டிற்கும் உட்கார்ந்து மணிக்கணக்கில் யோசித்து இவருக்காக விதவிதமான கவிதைகளை பொழிந்து வருகின்றனர். ஆனாலும் அவருடைய கவலைகள் எல்லாம் இவரைப் பற்றியும் சில தப்பாக கமெண்டுகளை போட்டு வருவது தானாம் .
நெகட்டிவிட்டியை விடுங்க
ஆனாலும் அதையெல்லாம் தள்ளிவிட்டு மேலே வருவது தான் புத்திசாலித்தனம் என இவர் தன்னுடைய ரசிகர்களுக்கு கூறிவருகிறார் .இதற்கு முன்பு இவர் தன்னுடைய ரசிகர்களின் கமெண்ட் களுக்கு பொறுமையாக பதில் அளித்து வருவார் .ஆனால் தற்போது பிசியாக இருக்கும் காரணத்தினால் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என ரசிகர்கள் கவலை அடைந்து வருகின்றனர் .
ஜோதிகாவின் டயலாக்
ஆனாலும் அவர்களுக்கும் கிடைக்கும் நேரத்தில் பொறுமையாக பதில் கூறி இருக்கிறார் .ஆனால் தற்போது ஜோதிகாவின் டயலாக் பெண்கள் இதை செய்யணும் செய்யக்கூடாது என ஆயிரம் இருக்கும் ஆனால் தனது மனதிற்கு பிடித்ததை செய்வதற்கு அவர்களுக்கு உரிமையில்லை என வருத்தத்தோடு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அவருடைய தரிசனத்தைக் காலை வேளையில் பார்த்ததும் ரசிகர்கள் ஹார்ட்டின் களை பறக்கவிட்டு வருகின்றனர்.