கண்ணின்மணி கண்ணின்மணி கதை கேளம்மா.. ராஜா கிட்ட நிறைய கத்துக்கணும்.. நெகிழும் தீனா
சென்னை: சன் டிவியில் இரவு 9.30 மணியாகிவிட்டால் எல்லாரி வீடுகளிலும் கண்ணின் மணி பாடல் ஒலித்த பாடல் இது. இது ராதிகா தயாரித்து, நடித்த சித்தி சீரியலின் டைட்டில் பாடல்.
பின்னொரு காலத்தில் இந்த பாடலை தங்களது ரிங்க் டோனாக பலரும் ஆசைப்பட்டு வைத்துக்கொண்ட அருமையான பாடல் இது. நித்திய ஸ்ரீயின் வெண்கல குரலில் இந்த பாடலை கேட்டால் மெய் சிலிர்த்து போகும்.
இப்படிப்பட்ட அருமையான பாடலுக்கு இசை அமைத்தவர் நம்ம தீனா. இவர் இப்போது இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கார். இவரை சன் டிவியின் இன்றைய வணக்கம் தமிழா நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார்கள்.
என் மேல நம்பிக்கை இல்லையா ரோஜா.. இருக்கு சார்.. ஆனா என் மேலதான் இல்லை!
இசைஞானி இளையராஜா அவருக்கு மட்டும் ரைட்ஸ் கேட்கலை, அதில் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களுக்கும் ஒரு சிறிய தொகையாவது ராயல்டியாக சேர வேண்டும் என்பதற்காக பாடுபட்டார்.அதிலும் கல்யாண வீடுகளுக்கு, கோயில் வைபவங்களுக்கு விலக்கு அளித்தார்.
இப்போது, ராயல்டி அனைத்து இசை கலைஞர்களுக்கும் வருது. அவர கேட்டது தவறாக பேசப்பட்டுவிட்டது வருத்தம்தான். அவருடன் பல வருடங்கள் நான் வேலை செய்து இருக்கேன். வைதேகி காத்திருந்தாள் படத்துல ஹாலில் நல்லா பிராக்டீஸ் பண்ணியிருந்தேன்.
டேக் வரும்போது சொதப்பிருச்சு.. ரிஹர்சலில் வாசிப்பது பெரிசுல்ல, வாத்தியத்தில் சரியாக வாசிக்க வேண்டும்னு சொன்னார். அவரிடம் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. அதுல டிசிப்ளின், தியானம் ரொம்ப முக்கியமனு தீனா சொன்னார்.
ராதிகா மேடம் கூப்பிட்டப்போ, என்னடா சினிமாவுல வாய்ப்பு வரும்னு காத்திருந்தா, சீரியலில் வந்திருக்கேன்னு ஆதங்க பட்டேன்... ஆனா, 9.30 மணிக்கு சீரியல் ஒளிபரப்பாகி, 9:35க்கு எல்லாம் கண்ணின் மணி பாடல் பிரபலமாகி உலகத்தின் தமிழர்கள் மத்தியில் எனக்கு பெரும் புகழ் கிடைச்சுது.
ராதிகா மேடம், சன் டிவிக்கு நன்றி என்றார்.