நான் சத்ரியன்.. அதனால் தான் தேவயானிக்கு கோவிலில் தாலி கட்டினேன்! இயக்குனர் ராஜகுமாரன் ஆதங்கம்
சென்னை: தமிழ் திரையுலகில் 'நீ வருவாய் என,காதலுடன், விண்ணுக்கும் மண்ணுக்கும், திருமதி தமிழ் போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் ராஜகுமாரன். இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகை தேவயானியின் கணவராகவும் இவர் பரவலாக அறியப்படுகிறார். சமீப காலமாக ராஜகுமாரன் பேசும் வெளிப்படையான கருத்துகளால் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் சமீபத்திய ஒரு பேட்டியில், தேவயானியுடன் நடைபெற்ற திருமணம் குறித்து ராஜகுமாரன் மனம் திறந்து பேசியுள்ளார். "நான் பல ஆண்டுகள் உதவி இயக்குநராக பணியாற்றிய பிறகே இயக்குநராக மாறினேன். தேவயானி நடித்த படங்களில் ஷூட்டிங் நேரத்தில் அவருக்கு வசனங்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறேன் என்று பேசிக் கொண்டிருந்தார், அப்படி இருக்கும்போது ஏன் வீட்டை விட்டு வெளியேறி அவசரமாக திருமணம் செய்துகொண்டீர்கள்?" என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ராஜகுமாரன், "ஒரு பெண் திருமணத்திற்கு தயாராகி, தன்னுடன் வாழ்க்கை நடத்த விரும்பும் ஒருவரை தேர்ந்தெடுத்தால், அதை குடும்பம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அது ஒரு ஆணின் கடமை. நான் பிறப்பால் ஒரு சத்திரியன். இந்த மண்ணின் மைந்தன்.
திருமணத்திற்கு முன்பாக கூட கோயிலில் நின்று, 'நாம் உண்மையிலேயே கல்யாணம் செய்ய வேண்டுமா, இல்லையென்றால் சாமி கும்பிட்டு விட்டு திரும்பிவிடலாமா?' என்று கேட்டேன். அதற்கு தேவயானி என்னை முறைத்தபடியே 'கல்யாணம் செய்ய வேண்டும்' என்று உறுதியாக சொன்னார். திருமணம் நடக்கப் போகும் 10 நிமிடங்களுக்கு முன்பும் கூட நான் அவரிடம் கேட்டேன்" என்று கூறினார்.
சினிமா தந்த அடையாளம்
தொடர்ந்து பேசிய ராஜகுமாரன், சினிமா தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம் குறித்து குறிப்பிட்டார். "எனக்கு சினிமா நிறைய கொடுத்திருக்கிறது. உலகின் எந்த மூலையில் சென்றாலும், பெரிய மனிதர்கள் என்னை அடையாளம் காணும் நிலையை இந்தத் துறையே தந்தது. பணத்திற்காக நான் எதையும் செய்ததில்லை.
பணம் கொடுத்தால் வேலை செய்வேன் என்பதும் இல்லை. மனம் விரும்பினால் மட்டுமே செய்வேன். இப்போது இயற்கை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட சில விஷயங்களிலும் ஈடுபட்டுள்ளேன், அது கூட பணத்திற்காக அல்ல" என்று தெரிவித்தார்.
தேவயானியின் கணவரா? இயக்குநரா?
"பலருக்கு நான் தேவயானியின் கணவராக தான் தெரிகிறேன். அதே நேரத்தில் இயக்குநர் ராஜகுமாரனாகவும் பார்க்கப்படுகிறேன். இரண்டையும் நான் ஒன்றாகத்தான் ஏற்றுக்கொள்கிறேன். நாளை 'இனியா அப்பா', 'பிரியங்கா அப்பா' என்றெல்லாம் கூட அழைக்கலாம். அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை" என அவர் கூறினார்.
இந்நிலையில், இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி செய்த செயல் குறித்தும் ராஜகுமாரன் பகிர்ந்துள்ளார். ஒருமுறை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்திற்கு சென்றபோது, அங்கு இருந்த ஒருவரிடம் "இவர் யார் தெரியுமா?" என்று ஆர்.பி.சௌத்ரி கேட்டதாகவும், அதற்கு "தேவயானி கணவர்" என்று பதில் வந்ததும், அவர் கடுமையாக கோபமடைந்ததாகவும் ராஜகுமாரன் கூறியிருக்கிறார்.
"முதலில் இவர் இயக்குநர் ராஜகுமாரன். அப்புறம்தான் தேவயானியின் கணவர். நம்ம கம்பெனியில் தான் முதல் படம் எடுத்தார்" என்று ஆர்.பி.சௌத்ரி பெருமையாக கூறினார் எனவும் அவர் தெரிவித்தார்.
தேவயானி - ராஜகுமாரன் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ராஜகுமாரன், தனது கருத்துகள் காரணமாக சமீப காலங்களில் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். சில பேட்டிகளில் அவர் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களையும் எதிர்வினைகளையும் ஏற்படுத்தின. இதனால் அவர் பேசும் ஒவ்வொரு விஷயமும் தற்போது கவனமாக பார்க்கப்படுகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications