சானைக்கு பிறந்த சோனை! வடிவேல் காமெடியில் கலக்கினாரே தேனி முருகன்! பாரதிராஜாவுக்கு சொந்தமாமே?
சென்னை: வடிவேல் காமெடி சீன்கள் முதல் கனா காணும் காலங்கள் சீரியல் வரை நடித்த தேனி முருகன், இயக்குநர் பாரதிராஜாவுக்கு இப்படி ஒரு சொந்தமா என ரசிகர்கள் வியக்கிறார்கள். இதுவரை இவரைப் பற்றி தெரியாமல் இருந்த நிலையில் மனோஜின் மரணத்திற்கு பிறகு பாரதிராஜா குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்கள், காமெடி காட்சியில் நடித்தவர்தான் தேனி முருகன். இவர் இயக்குநர் பாரதிராஜாவின் தம்பி என்கிறார்கள். அவருக்கு ஜெயராஜ் என்ற ஒரு தம்பி இருப்பது பெரும்பாலானோருக்கு தெரியும். ஆனால் தேனி முருகன் குறித்த விவரங்கள் தற்போது மீண்டும் வைலராகி வருகின்றன.

நடிகர் தேனி முருகன் ஒரு பிரபல சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது பெயர் முருகன். சினிமா துறையில் பல்வேறு முருகன்கள் இருந்ததால் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தேனி முருகன் என பெயரிட்டுக் கொண்டேன்.
பாரதிராஜா உண்மையிலேயே எனக்கு அண்ணன். அதாவது அவருடைய அம்மாவும் எனது அம்மாவும் அக்கா தங்கைகள். அதாவது அவர் எனக்கு பெரியம்மா பையன் என்ற முறையில் அண்ணன். ஆனால் சினிமா துறையில் நாங்கள் அந்த உறவை பயன்படுத்திக் கொள்ளமாட்டோம். அவர் எப்போதுமே எனது குருதான்.
முதலில் நான் உதவி இயக்குநராக இருந்தேன். அதன் மூலம் எனக்கு சிறிய சிறிய ரோல்கள் கிடைத்தன. வடிவேலுவுடன் நிறைய படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தேன். சாணைக்கு பிறந்த சோனை என்ற வசனம் மிகவும் பிரபலம்.
இதை வடிவேலுவிடம் சொல்வேன். அதற்கு அவர் வாடா பானைக்கு பிறந்த பன்னி என அழைப்பார். அவர் மாதிரி காமெடி காட்சிகளில் யாராலும் நடிக்க முடியாது. ஐயா, தாஜ்மகால், பத்மினியும் பண்ணையாரும், பருத்தி வீரன் உள்ளிட்ட படங்களில் நான் நடித்துள்ளேன்.
பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் பச்சைக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அது போல் காற்றுக்கென்ன வேலி சீரியலில் புலிக்குட்டிக்கு அப்பா ரோலில் நடித்தேன். இந்த சீரியல்களும் மக்கள் மத்தியில் பிரபலம். இப்படியாக தேனி முருகன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் அந்த படத்தில் தேனி முருகன், மதுபோதையில் இருப்பது போல் நடித்திருப்பார். அவர் பாட்டிலை வடிவேலுவின் பேக்கில் சொருகி ஐய் குத்திருச்சி, குத்திருச்சி என கூறுவார். மேலும் இவர் கண்ணாடியை செருகியதால் வலியால் வடிவேல் துடிப்பார். அதற்கு தேனி முருகன், இனி ஆட்டாமல் சானை பிடிக்கணும் என்பார்.
அண்மையில் பாரதிராஜாவின் ஒரே மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் காலமானார். இதனால் பாரதிராஜா மிகவும் உடைந்து, தனது மகன் எங்கே என கேட்கும் அளவுக்கு மகனின் மரணம் பாரதிராஜாவின் மனதை பாதித்துள்ளது. கங்கை அமரன் அவரது வீட்டிற்கு சென்று பாட்டு பாடி ஆறுதல் தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications