ஜீவானந்தம் சொன்ன “அந்த” பெயர்.. கண்ணீர் விட்டு கதறும் ஈஸ்வரி.. குணசேகரனுக்கு தெரிய வரும் உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் ஏற்கனவே அனைவரும் கணித்திருந்த ஜீவானந்தம் மற்றும் ஈஸ்வரி பற்றிய ரகசியம் வெளிவந்திருக்கிறது

Ethirneechal Serial 2023 August 10th promo full update

ஈஸ்வரியின் முன்னாள் காதலன் தான் ஜீவானந்தம் என்று தெரிய வந்திருக்கும் நிலையில் கதிர் வீட்டு பெண்களிடம் பிரச்சனை செய்கிறார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து பல எதிர்பாராத திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இப்போது ஜனனி சக்தி தனக்கு கொடுக்கும் டேட்டா படி இனி நான் ஜீவானந்தத்தை நானே நேரடியாக சந்திக்க போகிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு நந்தினி நானும் உன்னோடு வருகிறேன் என்று சொல்ல அதை ஜனனி மறுத்திருக்கிறார்.

எந்த பிரச்சனை வந்தாலும் அது என்னோடு போகட்டும். அதில் நம்ம குடும்பத்தை எல்லாரையும் சேர்த்து இழுத்து விட வேண்டாம் என்று ஜனனி சொல்ல, அதை கேட்காத நந்தினி நான் உனக்கு சப்போர்ட் ஆக வருவேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஆடிட்டர் உடன் வந்த வழக்கறிஞர் ஜீவானந்தத்திற்கு எதிராக நாம கோர்ட்டில் கேஸ் ஃபைல் பண்ணுவோம். அந்த கேஸ் நடந்து கொண்டிருக்கும் போது அப்பத்தா கண் முழித்து விட்டால் அப்பத்தாவை வைத்து நாம ஜீவானந்தம் பிரச்சனையை முடித்து விடலாம் என்று குணசேகரனுக்கு ஐடியா கொடுத்திருக்கிறார்.

அதே நேரத்தில் ஈஸ்வரி தன்னுடைய அப்பாவோடு தன்னுடைய கிராமத்தில் உள்ள இடத்திற்கு போயிருக்கிறார். அங்கு தன்னுடைய பழைய சொத்து மீண்டும் தங்களுக்கு வந்துவிட்டது என்று அப்பாவும் மகளும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு ஒரு கார் வருகிறது, அதிலிருந்து ஜீவானந்தம் இறங்கி வருகிறார். அதே நேரத்தில் அது யார் என்று ஈஸ்வரியும் பார்க்கிறார். இப்படியாக நேற்றைய எபிசோடு முடிவடைந்து இருந்தது.

அதைத்தொடர்ந்து வெளியான ப்ரோமோவில் வீட்டில் கதிர் கத்திக் கொண்டிருக்க அதற்கு ஜனனி கோவமாக என்ன வேணும் உங்களுக்கு என்று கேட்க, அதற்கு 5 கோடி பணம் வேணும் போய் எடுத்துட்டு வா போ என்று கத்த, அதற்கு நந்தினி சொத்து எல்லாம் போகப் போகுதுன்னு தெரிஞ்சு போச்சா உங்களுக்கு? இவகிட்ட வந்து கடன் கேக்குறீங்க, என்று நக்கல் அடிக்க அதற்கு கதிர் நந்தினியை அடிக்க வருகிறார்.

அடுத்ததாக ஈஸ்வரியை சந்திக்கும் ஜீவானந்தத்திடம், "நீங்க பண்றது எதுவுமே சரி இல்ல எரிச்சலா இருக்கு" என்று கோபமாக பேச, அதற்கு ஜீவானந்தம் "ஈஸ்வரிக்கு இப்படி எல்லாம் கோபமே வராது" என்று சொல்லி "உங்க அப்பா உங்களுக்கு குணசேகரனை கல்யாணம் பண்ணி வச்சுட்டாரு.

அதுக்கப்புறம் நீங்க அந்த பையனை நினைத்து இருக்க வாய்ப்பு இல்ல. அவன் பேரு ஜீவானந்தம்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி போகிறார். அதைக் கேட்டு ஈஸ்வரி அழுது கொண்டிருக்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த எபிசோடு பார்க்க ஆர்வம் அதிகரித்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+