எதிர்நீச்சலில் இப்படியா ஆகணும்? ஜீவானந்தம் பற்றி சக்தி சொன்ன வார்த்தை.. நந்தினியால் அடுத்த பிரச்சனை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் ஜீவானந்தத்தை பற்றி தகவல் சேகரிக்க போயிருந்த சக்தி வீட்டிற்கு வந்து எதிர்பாராத பதிலை சொல்கிறார்.

அதே நேரத்தில் நந்தினி மற்றும் ரேணுகா செய்யும் கிண்டலால் அடுத்த பிரச்சனை தொடங்கி இருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பார்க்காத அடுத்தடுத்து திருப்பங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த தகவல்கள் கடைசி நேரத்தில் சப் என்று முடிவடைந்து இருக்கிறது.
அதாவது ஜீவானந்தம் பற்றி சக்தி ஜீவானந்தத்தின் சொந்த ஊரில் விசாரித்து வருகிறேன் என்று தனியாக கிளம்பவே இருந்தார். இந்த நிலையில் சக்தி வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் ஜீவானந்தம் பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா என்று நந்தினி, ஜனனி, ரேணுகாவும் விசாரிக்கின்றனர்.
அதற்கு சக்தி அவன் எங்க இருக்கிறான் என்று அழுத்தி கேட்டா ஒரு பையன் வாயை தொறக்க மாட்டுக்காங்க என்று சொல்ல, அதற்கு நந்தினி அப்படி எல்லாரையும் ப்ளே பண்ணி வச்சிருக்கான். அந்த ஜீவானந்தம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் வெளியில் சென்று காரில் வீட்டிற்கு வந்து இறங்கிய கதிர் மற்றும் ஞானத்தை பார்த்ததும் ரேணுகாவும் நந்தினியும் கிண்டல் செய்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதாவது ஞானத்தையும் கதிரையும் பார்த்ததும் நந்தினி இவங்க எங்க தான் போவாங்களோ என்று சொல்ல, அதற்கு ரேணுகா அந்த ஜீவானந்தத்தை பார்க்க பயந்துகிட்டு இங்கிட்டு ஓடி வந்துருவாங்களோ? என்று ஒருவருக்கொருவர் பேசி நக்கலாக சிரித்துக் கொண்டிருக்கின்றனர். அதைக் கேட்டு கதிர் மற்றும் ஞானம் இருவரும் முறைத்துக் கொண்டு போகின்றனர். இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த ப்ரோமோ இன்று இல்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.
ஏனென்றால் ஜீவானந்தம் பற்றி கதிர் ஏதாவது தகவல்கள் சேகரித்துக் கொண்டு வருவார் என்று நினைத்து இருந்தனர். ஆனால் சக்தியின் பதில்இப்படித்தான் செய்வார் என்று அலுப்பு தட்ட வைத்து விட்டது. அதே நேரத்தில் எபிசோடில் ஜீவானந்தம் சொன்ன ஃப்ளாஷ்பேக் கதையை கேட்டு ஈஸ்வரி அழுததை பார்த்து அதிகமான ரசிகர்கள் இன்றைய ப்ரோமோவில் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications